தேவர்களின் சேனாதிபதியான முருகனின் சக்தியைக் கொண்ட கவுமாரி தேவி நவராத்திரி ஆறாம் நாள் வணங்கும் தெய்வமாகும். முருகப் பெருமானைப் போல் மயில்வாகனமும் சேவல் கொடியும் கொண்ட இவள் ஓங்கார சொரூபமானவள் ஆகும். இவ்வாசகத்தில் நவராத்திரி ஆறாம் நாள் (Navratri Pooja 2022) கவுமாரி தேவிக்கு என்ன பிரசாதம் செய்து எந்த திருமந்திரம் உச்சரித்து அம்மாளை எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆராதிப்பது என்பதைக் காணலாம்.
நவராத்திரி ஆறாம் நாள் பூஜை (Sixth Day Of Navratri Puja)
முருகனின் சக்தியைக் கொண்ட சக்தியாக திகழும் கவுமாரி தேவியை வணங்குவதால் சகல பாவங்களும் விலகி நிம்மதியான வாழ்வு கிடைக்கும். அம்மாளை செம்பருத்தி பூ கொண்டு அலங்கரித்து நீலாம்பரி ராகத்தில் இசை அமைத்து பூஜை செய்தல் வேண்டும். இன்றைய தினம் பருப்பு அல்லது கடலை மாவு மூலம் தேவியின் நாமத்தை கோலம் போட வேண்டும்.
மயில் வாகனத்தில் காட்சி அளிக்கும் அம்மாள் ஆரஞ்சு மற்றும் நைவேத்தியம் படைத்து பூஜை செய்ய வேண்டும். இந்த பூசையில் கலந்து கொள்வதன் மூலம் நம் மனதில் தைரியம் அதிகமாகும் என்பது நம்பிக்கை ஆகும்.
மந்திரம் (Navarathri Sixth Day Mantra):
ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர (சக்தி) ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்
வணங்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் (Navratri Sixth Day):
விசாகம், உத்திரட்டாதி
பிரசாதம் (Sixth Day Of Navratri Prasadam):
இன்று தேங்காய் சாதம் செய்து அம்மாளுக்கு நைவேத்தியமாக படைத்து பூஜை செய்தல் வேண்டும். இவ்வாறு பூஜை செய்த பிரசாதத்தை பக்தர்களுக்கு அளிப்பதால் நமக்கு உணவு பஞ்சம் விலகும் என்பது நம்பிக்கை ஆகும்.
யார் யார் வணங்க வேண்டும், என்ன பிரசாதம் செய்ய வேண்டும், சொல்ல வேண்டிய மந்திரம்
1st நாள் | 4th நாள் | 7th நாள் |
2nd நாள் | 5th நாள் | 8th நாள் |
3rd நாள் | 6th நாள் | 9th நாள் |
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…