நவகிரகங்களில் நீதிபதி என்று சொல்லப்படும் சனி கிரகம் வருகின்ற 17,2023 அன்று அதன் சொந்த ராசியான கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். பொதுவாக, சனி பகவான் ஒவ்வொரு ராசிகளிலும் சுமார் இரண்டரை வருடங்கள் தங்கி, பிறகு மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவார். அதன்படி 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்பத்திற்கு வரப்போகிறார். 17 ஆம் தேதிக்கு பிறகு 2025 வரை கும்ப ராசியிலேயே தான் இருப்பார். தனது சொந்த வரும் சனிபகவானால், கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் தொடங்கும். ஏழரை சனி உச்சத்தில் இருக்கும் இரண்டாம் கட்டம் சற்று ஆபத்தானது. ஏனென்றால், இது ஒரு மனிதன் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க தேவையான பணம், ஆரோக்கியம், குடும்பம், மனம் என அனைத்தையும் ஆட்டிப் படைக்கும்.
எனவே, ஏழரை சனி உச்சத்தில் இருப்பவர்கள் சில முறையான பரிகாரிங்களை செய்வதன் மூலமாக கெடுபலன்களை பாதியாக குறைக்க முடியும். இருப்பினும், கும்பத்தின் ராசி அதிபதியான சனிபகவான், தனது சொந்த ராசிக்காரர்களுக்கு கெடுபலன்களை குறைத்தே கொடுப்பார். சில நேரத்தில் சுப பலன்களையும் கொடுப்பார். இருப்பினும், ஜாதகத்தில் சனி அசுப ஸ்தானத்தில் இருப்பவர்கள் ரொம்பவே கவனமாக இருப்பது நல்லது.
17 ஆம் தேதி சனிப்பெயர்ச்சியானவுடன், கும்ப ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்த ஆரோக்கியப் பிரச்சனைகள் குறையும். அதேபோல், பண நெருக்கடியால் படாதபாடு பட்டவர்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். இருப்பினும், சனியின் வக்ர அம்சத்தின் பாதிப்பும் கூடவே இருக்கும். தேர்வுகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம்.
திருமண வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கும்ப ராசிக்காரர்கள் ஆணாக இருந்தால் பெண்ணுடனும், பெண்ணாக இருந்தால் ஆணுடனும் தேவையில்லாமல் வாக்குவாதங்கள் வளர்ந்துக் கொண்டே இருக்கும். திருமண வயதில் இருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு திருமண நடைபெறுவதில் சற்று தாமதம் ஏற்படலாம். எனவே, இந்த காலக்கட்டத்தில் கெட்ட வார்த்தை பயன்படுத்துவதை, கெட்ட பழக்கவழக்கங்களையும் தவிர்ப்பது உத்தமம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…