Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை.! இனி இந்த ராசியின் தலைவிதி மாறும்.! | Sani Peyarchi Palangal 2023

Gowthami Subramani Updated:
சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை.! இனி இந்த ராசியின் தலைவிதி மாறும்.! | Sani Peyarchi Palangal 2023 Representative Image.

ஜனவரி மாதம் நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சியினால், ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை பெற்று நல்ல பயன்களைப் பெற உள்ள ராசிக்காரர்கள் யார் என்பது பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை.! இனி இந்த ராசியின் தலைவிதி மாறும்.! | Sani Peyarchi Palangal 2023 Representative Image

சனிப்பெயர்ச்சி 2023

சனி பகவானின் ஆதிக்கத்தினால், ஒவ்வொரு ராசிக்காரர்களும் அபரிமிதமான நன்மைகளும் அடைவர். அதே சமயம், கடும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையையும் அடைவர். மக்களுக்கு நீதி வழங்கும் நீதிக்கடவுளாக இருப்பவர் சனி பகவான். இந்த 2023 ஜனவரி மாதம் 17 ஆம் நாள் கும்ப ராசியில் நுழைவார். இதன் காரணமாக, சில ராசிகளுக்கு ஏழரை சனியின் தாக்கத்திலிருந்து முக்தி கிடைக்க உள்ளது. அவற்றைப் பற்றி இதில் காண்போம்.

சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை.! இனி இந்த ராசியின் தலைவிதி மாறும்.! | Sani Peyarchi Palangal 2023 Representative Image

துலாம்

இந்த சனிப்பெயர்ச்சியின் போது, துலாம் ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து விடுதலை கிடைக்க உள்ளது. இதுவரை துலாம் ராசிக்காரர்களுக்குத் தடைபட்ட அனைத்துப் பணிகளும் இப்போது தொடங்கும். இதனால், அவர்களின் மன அழுத்தம் குறைவதுடன், மகிழ்ச்சி அதிகரிக்கும். மேலும், தொழிலில் முன்னேற்றமும், பண வருவாயும் கிடைக்கும். இந்த சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு வெற்றி பெறக்கூடிய ராசிகளில் துலாம் ராசிக்காரர்களும் உள்ளனர்.

சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை.! இனி இந்த ராசியின் தலைவிதி மாறும்.! | Sani Peyarchi Palangal 2023 Representative Image

தனுசு

நீண்ட நாள்களாக, ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தால் படாத பாடு பட்டுக் கிடந்த தனுசு ராசிக்காரர்களுக்கும் விடுதலை கிடைக்க உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம், தனுசு ராசிக்காரர்கள் பெற்றிருந்த துன்பங்கள் அனைத்தும் விலகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் நிகழும். மன உளைச்சல்கள், நோய்கள் அனைத்தும் விலகும். இந்த சனிப்பெயர்ச்சியால், அதிர்ஷ்டம் உள்ள ராசிக்காரர்களாக மாறப்போகிறவர்கள் தனுசு ராசிக்காரர்கள் ஆவர்.

சனியின் தாக்கத்திலிருந்து விடுதலை.! இனி இந்த ராசியின் தலைவிதி மாறும்.! | Sani Peyarchi Palangal 2023 Representative Image

மிதுனம்

இதுவரை, மகர ராசியில் சஞ்சரித்த சனிபகவான், தற்போது கும்ப ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதனால், மிதுன ராசியில் சனி பகவானின் தாக்கம் முடிவுக்கு வர உள்ளது. இதனால், மிதுன ராசிக்காரர்கள் இதுவரை அனுபவித்து வந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள். இவர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் காணப்படுவதுடன், நல்ல வாழ்க்கை தொடங்கும்.

இந்த சனிப்பெயர்ச்சியால், சனியிலிருந்து விடுபட்டு அதிர்ஷ்டத்தைப் பெறவிருக்கும் ராசிக்காரர்கள் இவர்கள் தான். அதே சமயம், துன்பத்தைச் சந்திக்கப் போகும் ராசிக்காரர்களின் பட்டியலில் கடகம் மற்றும் விருச்சி ராசிக்காரர்கள் உள்ளனர். இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனத்துடன் செயல்படுவது நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்