மனிதர்கள் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பலன்களை தருவதால் சனி பகவான் நீதி கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சிவபெருமானே சனியின் வக்கிரப் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாத போது, நம்மால் மட்டும் என்ன செய்ய முடியும். வேற வழியே இல்லை நம் கர்ம வினைகளை நாம் அனுபவித்து தான் ஆக வேண்டும். நவகிரகங்களில் சனி பகவான் தான் மிகவும் மெதுவாக நகருவார். எனவே, தான் கிரகங்களில் அவரின் சிறிய மாற்றத்தால் 12 ராசிகளுக்கும் மாற்றங்கள் நிகழும்.
இந்த ஜனவரி 17, 2023 இல் சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். இவரின் இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு நன்மையையும், சில ராசிக்கு தீமையும் நடக்கும். யார் யாருக்கு என்னென்ன என்று விரிவாக இந்த பதிவில் பாப்போம்.
மிதுனம்
வரும் ஜனவரி 17, 2023 ஆம் தேதியில் இருந்து சனி திசையில் இருந்து மிதுன ராசிக்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது. இந்த சனி பெயர்ச்சியால் மிதுன ராசிக்கு கிடைக்காமல் போன நற்பலன்கள் அனைத்தும் வந்து சேரும். இதுவரை உங்களை வாட்டி வதக்கிய பிரச்சனைகள் கண்டிப்பாக விலகும்.
துலாம்
சனி பெயர்ச்சி 2023 இல் நன்மை அடையும் ராசிக்காரர்களுள் துலாம் ராசியும் உண்டு. இவர்களுக்கு வராமல் போன பண வரவு, உடல் ரீதியான தொந்தரவுகள் எல்லாம் விலகும். வருமானம் அதிகரிக்கும், உடல் ஆரோக்கியம் சீராக அமையும், தொழில் முன்னேற்றம் அடையும்.
தனுஷ்
தற்போது ஏழரை நாட்டு சனியின் கடைசி கட்டம் தனுஷ் ராசிக்கு நடக்கிறது. எனவே, இந்த பயிற்சியால் தனுஷ் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். சனி போகும் போது அள்ளி கொடுப்பார் என்று சொல்லவது போல உங்களுக்கு நன்மைகளை தருவார்.
கும்பம்
2023 ஜனவரி 17 ஆம் தேதி மகர ராசியில் இருந்து சனி நேரடியாக கும்ப ராசிக்கு நகர்கிறார். இது கும்ப ராசிக்கார்களுக்கு இரண்டாம் கட்டம் ஏழரை சனிக்கான தொடக்கமாக அமையும். எனவே, மன நிம்மதி, உடல் ரீதியான தொந்தரவு, பணம் புழக்கத்தில் கவனம் தேவை என்று தொந்தரவுகள் வரலாம். கூடுதல் கவனம் தேவை.
மீனம்
2023 ஆம் ஆண்டின் சனி பெயர்ச்சியானது மீன ராசிக்கு முதல் கட்ட ஏழரை சனிக்கான காலமாக அமையும். இதனின் தாக்கம் 2030 ஆம் ஆண்டு வரை நீடிக்கும். இது முதல் கட்டம் என்பதால் அதிக சிக்கல் இருக்க வாய்ப்பில்லை. எனினும் சனி பகவானை பிராதிப்பது வரப்போகும் வினைகளை தடுக்க உதவும்.
மகரம்
என்ன தான் சனி மகர ராசியில் இருந்து போனாலும், அதற்கான தாக்கம் சற்று இருக்கும். இது மார்ச் 29, 2025 வரை ஏழரை சனியின் தாக்கம் இருப்பதால் கவனம் அவசியம்.
ஏழரை சனி அல்லது சனி திசை நடைபெறும் போது சனி பகவானின் கோபத்தை குறைக்க சில பரிகர்கள் உள்ளது. அதனை செய்வதன் மூலம் நம்மால் சனீஸ்வரனின் பார்வையின் தாக்கம் சற்று குறையும். சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி பிராத்தனை செய்யுங்கள். வறுமையில் இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சனி சாலிசா, கோளறு பதிகம், ஹனுமான் சாலிசா போன்ற தோத்திரங்களை தினமும் துதித்து வாருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…