ஜோதிட சாஸ்திரத்தில், மிகவும் மெதுவாக நகரும் கிரமாக கருதப்படுவது சனி கிரகம். அதாவது, சனி கிரகம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும். அதன்படி, ஒவ்வொரு ராசிக்கு மீண்டும் வருவதற்கு 30 வருடங்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்தவகையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் தனது சொந்த ராசியான கும்பத்திற்கு வருகின்ற ஜனவரி 17 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த பெயர்ச்சியால் ஏற்படும் தாக்கமானது 12 ராசிகளுக்கும் உண்டு. இருப்பினும், 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை பார்க்கலாம்.
உங்க ராசிக்கு 8ஆம் வீட்டில் பயணம் செய்யும் சனிபகவானால் உங்களுக்கு அஷ்டமத்து சனி ஆரம்பமாகிறது. இதனால், ஒருபக்கம் விபரீத ராஜ யோகத்தை கொடுத்தாலும், மறுபக்கம் பல சிக்கல்களையும் ஏற்படுத்துவார். எனவே, வேலை செய்யும் இடத்தில் கடினமாக உழைக்க வேண்டிய சூழல் ஏற்படும். கடனாக கொடுத்த பணம் கைக்கு கிடைக்காமல் போகலாம். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வந்து போகும். அனுசரித்துக் கொண்டால் பெரிய பிரச்சனையை தவிர்க்க முடியும்.
உங்க ராசிக்கு 11 மற்றும் 12 ஆம் வீட்டில் பயணம் செய்யும் சனிபகவானால், வீண் செலவுகள் ஏற்படும். குடும்ப பிரச்சனைகளை சமாளிப்பதில் திணறுவீர்கள். பழைய நீதிமன்ற வழக்கு காரணமாக நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. குடும்ப உறுப்பினர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. அரசுப் பணிகளுக்குத் தயாராகும் நபர்கள் இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். சிலர் பழைய நோய்களால் மீண்டும் சிரமப்படுவீர்கள்.
உங்க ராசிக்கு 7ஆம் வீட்டில் பயணம் செய்யும் சனிபகவானால் திருமண வாழ்க்கையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். காதலர்களுக்கு இடையே அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்படும். மேலும், இந்த காலக்கட்டத்தில் மனைவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். சிலருக்கு தந்தை - மகன் இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். அதேபோல், வியாபாரத்தில் உங்களுக்கு கீழ் உள்ள ஊழியர்களை அவமதிக்காதீர்கள்.
உங்க ராசிக்கு 3 மற்றும் 4ஆம் வீட்டில் பயணம் செய்யும் சனிபகவானால், குடும்பத்தில் முரண்பாடுகள் காரணமாக மனஉளைச்சல்கள் ஏற்படும். சொத்து வாங்கும் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தமான விஷயங்களில் நண்பர்களை நம்ப வேண்டாம். தாயில் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். விலையுயர்ந்த பொருட்கள் திருடு போக வாய்ப்புள்ளது. இருப்பினும், சிலருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…