வருகின்ற ஜனவரி 17, 2023 ஆம் தேதி நீதிகாரகனான சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறவுள்ளார். இதன் தாக்கம் 12 ராசிக்காரர்களுக்கும் உண்டு. சனிப்பெயர்ச்சியால் சிலருக்கு பிரச்சனையில் இருந்து விடிவுகாலம் பிறக்கும், சிலருக்கு பிரச்சனை அதிகரிக்கும். எனவே, ஜனவரி 17 ஆம் தேதிக்கு பிறகு சனிபகவானின் கோபத்திலிருந்து தப்பிக்கவும், பாதிப்புகளை குறைக்கவும் சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அந்தவகையில், சனிப் பெயர்ச்சிக்கு பிறகு எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
ஜனவரி 17 ஆம் தேதி சனிபகவான் கும்ப ராசிக்கு பிரவேசிக்கவுள்ளார். இதனால், மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிரமங்கள் அடுத்தடுத்து ஆரம்பமாகும். இருக்கும் பிரச்சனை இன்னும் அதிகமாகலாம். இது ஆரோக்கியம், பொருளாதாரம், குடும்பம், வேலை, தொழில் என அனைத்திற்கும் பொருந்தும். எனவே, இந்த இரண்டு ராசிக்காரர்களும் உடல் ஆரோக்கியத்தில் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும்.
அதேபோல், இந்த காலத்தில் மற்றவர்களை குறிப்பாக வயதில் முத்தோர்களை கண்டிப்பதை தவிர்க்கவும். மேலும், கும்ப ராசியினருக்கு ஏழரை நாட்டு சனியின் 2ஆம் கட்டம் தொடங்குவதால் அவர்கள் ரொம்பவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கோபம், ஆணவத்தை அறவே தவிர்ப்பது சனிபகவானின் கோபத்திலிருந்து தப்பிக்கலாம். அதேபோல், மது பழக்கம், புகைப்பழக்கம் ஆகியவற்றை தவிர்ப்பதும் நல்லது.
இந்த இரண்டு ராசியினரும் இந்த காலக்கட்டத்தில் யாருக்கும் கடன் கொடுப்பதையும் தவிர்க்கவும். பெண்களுக்கு மதிப்பு கொடுத்து நடந்துக் கொள்வது உத்தமம். சனிபகவானின் கோபத்திலிருந்து தப்பிக்க கோளறு பதிக, சனி ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்வது நல்லது. தாக்கத்திலிருந்து விடுபட சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். அதேபோல், முடிந்தவரை ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யுங்கள். கெட்ட வார்த்தை பேசுவதை தவிர்க்கவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…