மாசி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், ரிஷபத்தில் செவ்வாய் பகவான், துலாம் ராசியில் கேது பகவான், மகர ராசியில் புதன் பகவான், கும்ப ராசியில் சனி மற்றும் சூரிய பகவான், மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிர பகவான் மாசி மாதம் 3 ஆம் தேதி கும்பத்திலிருந்து மீனத்திற்கும், மாசி 28 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியடைகிறார். அதேபோல், மாசி 15 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியடைகிறார். மாசி 28 ஆம் தேதி செவ்வாய் பகவான் மேஷத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மாசி மாதத்தில் கடக ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
சுக்கிர பகவானை ராசி அதிபதியாக கொண்ட கடக ராசியினரே! கடந்த மாதத்தில் உங்க ராசிக்கு 6ஆம் இடத்தில் இருந்த புதன் பகவானால் எடுக்கும் காரியங்களில் தடை, ஆரோக்கியத்தில் சிக்கல், குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை போன்றவற்றை சந்தித்திருப்பீர்கள். ஆனால், இந்த மாதத்தில் உங்க ராசிக்கு 7ஆம் இடமான கலஸ்தர ஸ்தானத்தில் தனித்து இருப்பதால், அற்புதமான காலக்கட்டமாக இருக்கும். எந்த காரியத்திலும் தைரியமாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் சகபணியாளர்களுடன் இருந்த பிரச்சனை முடிவுக்கு வரும். ஆனாலும், மேலதிகாரிகளை பற்றி பேசுகையில் அடக்கி வாசிக்க வேண்டும்.
இருப்பினும், அஷ்டம சனிக்காலம் என்பதால் அவ்வப்போது சிக்கலில் சிக்கக்கொள்ள நேரிடும். பெயர் தெரியாதவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் உருவாகும். ஆனால், குருபகவானின் 5ஆம் பார்வை உங்க ராசியின் மீது விழுவதால் அஷ்டம சனியால் ஏற்படும் பாதிப்பு பாதியாக குறைந்துவிடும். நல்ல வேலைக்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும் மாதமாக இருக்கும். எதிர்பாராமல் ஆன்மீக சுற்றுலா சென்றுவருவீர்கள்.
வியாபாரத்திற்காக வங்கிக் கடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் லோன் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் இழுத்தடிக்கும், பொறுமையாக இருக்க வேண்டும். ஹோட்டல் தொழில் செய்வோர் வாடிக்கையாளர்களிடம் கணிவான பேச்சு அவசியம். மேலும், இந்த மாதத்தில் கடன் வாங்குவதை தவிர்க்கவும். சொந்த தொழில் செய்வோருக்கு சுமாராக தான் இருக்கும். பணவிஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். சிலருக்கு இரண்டாவது திருமணம் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. அதேபோல், அரசு சார்ந்த விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தந்தையால் ஒருபக்கம் பிரச்சனை ஏற்பட்டாலும், மறுபக்கம் ஆதரவாக இருப்பார்.
மனதிற்கு பிடித்தவருடன் நீண்ட தூர பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். புதியதாக தொழில், வியாபாரம் தொடங்க விரும்புவோர் இந்த மாதம் 15 ஆம் தேதிக்குள் தாராளமாக ஆரம்பிக்கலாம். ஆண் நண்பர்களால் நற்பலன் உண்டு. சிலருக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இருப்பினும், பெரிய தொகை முதலீடு செய்வதை தவிர்த்துக் கொள்வது சிறந்தது. எதிர்பாராத தனவரவு ஏற்படும். தாயின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளவும்.
வணங்க வேண்டிய தெய்வம்: பார்வதி தேவி
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 6
சந்திராஷ்டம நாள்: மாசி 7 ஆம் தேதி இரவு 01.36 மணி முதல் மாசி 10 ஆம் தேதி அதிகாலை 04.32 மணி வரை
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…