சனிப்பெயர்ச்சி ஒரு சில ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தைத் தரக்கூடியதாக அமைகிறது. அதன் படி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சனிபகவான் மகிழ்ச்சியை அளிக்கவிருக்கிறார் என்பது குறித்து இதில் காண்போம்.
வரும் ஜனவரி 17 ஆம் நாள் அன்று, சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ஜோதிட விதிமுறைகளின் படி, கும்பம் சனியின் சொந்த ராசியாகும். இந்த நிலையில், ஒவ்வொரு ராசிக்காரர்களும் சனிபகவானின் தாக்கத்தை அனுபவிக்க உள்ளனர். அதன் படி, சனியின் ராஜயோகம் எந்த ராசிக்கு உருவாகும் என்றும், அந்த ராசிக்காரர்கள் பெறப்போகும் அதிர்ஷ்ட யோகங்களையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம். சனி ராஜயோகம், சாதாரண நிலையில் உள்ள மனிதனை மிக விரைவாக, உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.
சனி பகவானின் ராஜ யோகமானது ஷஷ யோகம் எனவும் அழைக்கப்படுகிறது. ஜாதகத்தில், லக்னம் அல்லது சந்திரனில் இருந்து நான்காம், ஏழாவது மற்றும் பத்தாம் வீட்டில் சனி அதன் உச்சமான கும்பம், மகரம் அல்லது துலாம் ராசியில் இருக்கும் போது இந்த யோகம் உருவாகிறது. இதனால், பலன் பெறக்கூடிய ராசிக்காரர்கள் அனைத்து வித நோய்களிலிருந்தும் தப்பிப்பார்கள். இது ஒருவரின் பொருளாதார நிலையை மேன்மை அடையச் செய்கிறது. ராஜயோகம் நடக்கும் போது, ஏழரை நாட்டு சனியின் தாக்கமும் பெரிதளவில் இருக்காது.
சனியின் ராஜயோகத்தால், அபரிமிதமான பலன்களைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் மேஷ ராசியினர். தற்போது, ராகு மேஷ ராசியில் இருக்கிறார். அடுத்த ஆண்டு, வியாழன் மேஷ ராசியில் இருப்பார். இந்நிலையில், மேஷ ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்க உள்ளார். இந்த சூழ்நிலையில் பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்பட்டு வருமானம் அதிகரிக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…