தமிழ்நாட்டு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகத்தின் (TNTEU) மூலம் பிஎட் படிப்பிற்கான சேர்க்கை செயல்முறை நடத்தப்படும். அதன் படி, இந்த 2022 ஆம் ஆண்டிற்கான பி.எட் சேர்க்கை விண்ணப்ப செயல்முறை நாளை அதாவது செப்டம்பர் 24, 2022 ஆம் நாள் தொடங்கி மார்ச் 03, 2022 வரை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் பிஎட் படிப்பிற்கான சேர்க்கை காலம் தொடங்கி விடும். இது குறித்த முறையான அறிவிப்பு தமிழ்நாடு ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகத்தால் ((TNTEU)) வெளியிடப்படும். அதன் படி, விண்ணப்பதாரர்கள் கவுன்சிலிங்கிற்கு தேவையானவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பி.எட் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு இல்லை. ஆனால், பிஎட் படிப்பில் சேர நினைப்பவர்கள் TNTEU தலைமையில் நடத்தப்படும் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும். (Is B.Ed have entrance exam)
பி.எட் படிப்பில் சேர நினைக்கும் நபர்கள் கண்டிப்பாகக் கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (b.ed qualification).
விண்ணப்பதாரர்கள் B.Ed படிப்பில் சேர்வதற்குத் தேவையான மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். இதில் SC, ST பிரிவினர்கள் 40% மற்றும் BC பிரிவினர்கள் 45% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
முதுகலைப் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டின் இளங்கலைக் கல்வித் திட்டத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த சேர்க்கைக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களைக் குறிப்பிடப்பட்ட தேதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலே கூறப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்த நபர்களின் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவர். இதில் அவர்களுக்கு விருப்பப்பட்ட கல்லூரிக்கான தேர்வுப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
தமிழகத்தில், பட்டப்படிப்பு அளவிலான தகுதித் தேர்வில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் இளங்கலைக் கல்வித் திட்டங்களில் சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
மாணவர்களின் தகுதி மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் கிடைக்கும் இடங்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் வழங்கப்படும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…