Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுந்தரியையும் அனுவையும் பிரிக்க நான் விட மாட்டேன்… கார்த்திக்கு சவால் விடும் அனுவின் அம்மா…

Gowthami Subramani November 01, 2022 & 14:15 [IST]
சுந்தரியையும் அனுவையும் பிரிக்க நான் விட மாட்டேன்… கார்த்திக்கு சவால் விடும் அனுவின் அம்மா…Representative Image.

சுந்தரி சீரியலின் பரபரப்பான இன்றைய எபிசோடில், கார்த்திக் எப்படியாவது சுந்தரியையும், அனுவையும் பிரிக்கணும்னு நினைக்கிறாரு. டைமண்ட் நெக்லஸ வெச்சி சுந்தரியையும் அனுவையும் பிரிக்க ஒரு பிளானும் போட்டு அது நல்லா வொர்க் ஆயிட்டு இருக்கு. இதுல சுந்தரி என்ன பண்ண போறாங்கனு இதில் பார்க்கலாம் வாங்க.

சுந்தரியையும் அனுவையும் பிரிக்க நான் விட மாட்டேன்… கார்த்திக்கு சவால் விடும் அனுவின் அம்மா…Representative Image

அனு நல்லா இருக்கணும், அனு வயித்துல இருக்க குழந்தை நல்லா இருக்கனும்னு சுந்தரி சாமி கிட்ட வந்து அழுது புலம்புனாங்க. இப்படி ஒட்டு மொத்த பாசத்தையும் வெச்ச சுந்தரிய அனு எப்படி வெறுப்பாங்க. எப்படியாவது பிளேன் போட்டு, அனுவையும் சுந்தரியையும் பிரிக்கணும்னு யோசிச்சி, சுந்தரிக்கு கொடுத்த டைமன்ட் நெக்லஸ வெச்சி பிளேன் போடுறாரு.

சுந்தரியையும் அனுவையும் பிரிக்க நான் விட மாட்டேன்… கார்த்திக்கு சவால் விடும் அனுவின் அம்மா…Representative Image

சுந்தரி கொடுத்த நெக்லஸ கொண்டு போய் கார்த்திக் அடகு கடையில வெச்சி பணம் வாங்க போறாரு. அங்க அந்த நெக்லஸ் போலியானதுனு சொல்லி, போலீஸ் அரஸ்ட் பண்ணீடுறாங்க. இந்த நேரத்துல பூஜை நடக்கப் போற நேரம். அனுவுக்கு போன் வந்ததுனால, பூஜை தடைபட்டுப் போச்சி. கார்த்திக்கிட்ட இருந்து போன் வந்துருக்கு. அதுல கார்த்திக் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கறதா சொன்னதுனால, அனு உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிடுறாங்க.

சுந்தரியையும் அனுவையும் பிரிக்க நான் விட மாட்டேன்… கார்த்திக்கு சவால் விடும் அனுவின் அம்மா…Representative Image

ஸ்டேஷன்ல இருந்து வரும் போது, அனு கிட்ட சுந்தரிய பத்தி தப்பு தப்பா போட்டுக் கொடுத்து சுந்தரிய வெறுக்க பிளேன் போடுறாரு கார்த்திக். உடனே, அனுவுக்கு அது போலவே கோவம் வந்துடுது,. உடனே வீட்டுக்கு வந்து கத்திட்டு, சுந்தரிய போய் பாக்க போறனு கிளம்புறப்ப, அனுவோட அம்மா சத்தியம் வாங்கி தடுத்துடுறாங்க. ஆனா இத பத்தி அனு யோசிச்சிட்டே இருக்கா. அனுவுக்கு, அவ மேல இருக்கறது விட அம்மா சுந்தரி மேல ரொம்ப பாசமா இருக்காங்கனு தோணுது.

சுந்தரியையும் அனுவையும் பிரிக்க நான் விட மாட்டேன்… கார்த்திக்கு சவால் விடும் அனுவின் அம்மா…Representative Image

கார்த்திக்கோட பிளேன தெரிஞ்சிக்கிட்ட அனுவோட அம்மா கார்த்திக் கிட்ட சவால் விடுறாங்க. சுந்தரிக்கும், அனுவுக்கும் பிரச்சனைய உண்டாக்கிட்டீல. இத எப்படி சமாளிக்கிறதுனு எனக்கு தெரியும். நான் பாத்துக்கிறேன் உன்னனு சொல்றாரு. உடனே, அனுவோட அம்மா சுந்தரிக்கு போன் பண்ணி எல்லா விஷயத்தயும் சொல்றாங்க. சுந்தரி நான் பாத்துக்கறன் மானு சொல்றாங்க. இதுக்கு அப்றம் சுந்தரி கார்த்திக்க என்ன பண்ண போறாங்கனு வெயிட் பண்ணி பார்க்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்