Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரபல நடிகரின் அண்ணன், தாய் இறந்த நிலையில் தந்தையும் மரணம்...! சோகத்தில் திரையுலகினர்….!

Gowthami Subramani November 15, 2022 & 10:35 [IST]
பிரபல நடிகரின் அண்ணன், தாய் இறந்த நிலையில் தந்தையும் மரணம்...! சோகத்தில் திரையுலகினர்….!Representative Image.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகவும், தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான கிருஷ்ணா இன்று காலை காலமானார். நேற்று உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், இன்று காலை தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபல நடிகரின் அண்ணன், தாய் இறந்த நிலையில் தந்தையும் மரணம்...! சோகத்தில் திரையுலகினர்….!Representative Image

தெலுங்கு திரையுலகில் தனது கதாபாத்திரத்தால் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா. இவர், நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருந்தவர். பன்முகத் தன்மை கொண்ட இவர் பல்வேறு புதிய விஷயங்களையும், தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தி வளர்ச்சிக்கு வித்திட்டவராக விளங்கினார்.

பிரபல நடிகரின் அண்ணன், தாய் இறந்த நிலையில் தந்தையும் மரணம்...! சோகத்தில் திரையுலகினர்….!Representative Image

அதிலும் குறிப்பாக, தெலுங்கி முதல் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தை உருவாக்கியதும் கிருஷ்ணா. மேலும், டோலிவுட்டின் முதல் கௌபாய் திரைப்படத்தை தயாரித்ததும் இவர் தான். இவரது படங்கள் அனைத்துமே பெரிய அளவில் ஹிட் ஆகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும் இருந்தது. அதே போல, சென்னையில் 100 நாள்களைக் கடந்து ஓடிய முதல் தெலுங்கு திரைப்படம் இவர் நடித்த “சிகட்டி வெலுகு” என்ற திரைப்படம் ஆகும்.

பிரபல நடிகரின் அண்ணன், தாய் இறந்த நிலையில் தந்தையும் மரணம்...! சோகத்தில் திரையுலகினர்….!Representative Image

அது மட்டுமல்லாமல், ஹைதராபாத்தில் இவர் நடித்த “அல்லூரி சீதாராமராஜூ” என்ற திரைப்படமானது ஓராண்டு ஓடி வெற்றியைத் தந்தது. இவ்வாறு பல்வேறு சாதனைகளையும், பல்வேறு படைப்புகளையும் உருவாக்கி தெலுங்கு திரையுலகிற்கு, இவரது மறைவு பெரும் இழப்பாக பார்க்கப்படுகிறது.

பிரபல நடிகரின் அண்ணன், தாய் இறந்த நிலையில் தந்தையும் மரணம்...! சோகத்தில் திரையுலகினர்….!Representative Image

ஒரே ஆண்டில் குடும்பத்தில் மூன்று பேரை பறிகொடுத்த மகேஷ் பாபு மிகுந்த சோகத்தில் இருக்கிறார். ஏனெனில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இவரது அண்ணனான ரமேஷ் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் இவரது தாயார் இந்திராதேவி காலமானார். அது மட்டுமல்லாமல், இவருக்கு மிக நெருக்கமாக இருந்த பி.ஏ.ராஜூவும் காலமானார். இந்த இழப்புகளை ஈடுகட்ட முடியாத இந்நிலையில் தற்போது இவரது தந்தையான கிருஷ்ணாவும் மறைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்