Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முதல்வர் கான்வாயில் ஃபுட்போர்டு அடித்த மேயர் பிரியா; வெளியானது பரபரப்பு காரணம்!

kanimozhi Updated:
முதல்வர் கான்வாயில் ஃபுட்போர்டு அடித்த மேயர் பிரியா; வெளியானது பரபரப்பு காரணம்! Representative Image.

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணி அளவில் தொடங்கி மறுநாள் அதிகாலை 2.30 மணி அளவில் கரையைக் கடந்தது. புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்ததால் சென்னை கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது. குறிப்பாக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் 80 கிலோ மீட்டர் வேகத்திற்கு இருந்தது. எனவே புயல் கரையைக் கடந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக காசிமேடு பகுதியை ஆய்வு செய்தார். 

முதல்வர் கான்வாயில் ஃபுட்போர்டு அடித்த மேயர் பிரியா; வெளியானது பரபரப்பு காரணம்! Representative Image

காசிமேட்டில் முதல்வர் ஆய்வு:

டிசம்பர் 10ம் தேதி அன்று முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.  காசிமேடு பகுதியில் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்திக்கச் சென்ற முதல்வர் ஸ்டாலின் உடன் சென்னை மேயர் பிரியா, கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்றுள்ளனர். காசிமேட்டிற்குள் நுழைந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கார் நிற்காமல் சென்றதாகவும், அவருக்காக காத்திருந்த சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோர் முதல்வரின் பாதுகாப்பிற்காக வந்த வாகனத்தில் ஓடிப்போய் ஃபுட்போர்டு அடித்ததாகவும் வீடியோ மட்டும் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. 

முதல்வர் கான்வாயில் ஃபுட்போர்டு அடித்த மேயர் பிரியா; வெளியானது பரபரப்பு காரணம்! Representative Image

வெடித்த சர்ச்சை:

இதனையடுத்து இதுதான் உங்களுடைய திராவிட மாடல் ஆட்சியா?.... பாலின சமத்துவமா?... சுயமரியாதையா? என பல கேள்விகள் திமுக முன்பு முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று பெண் மேயர் பிரியா உள்ளிட்டோர் ஏன் முதல்வர் கான்வாய் வாகனத்தில் ஃபுட்போர்டு அடித்தனர் என்பதற்கான உண்மையான காரணம் வெளியாகியுள்ளது. 

முதல்வர் கான்வாயில் ஃபுட்போர்டு அடித்த மேயர் பிரியா; வெளியானது பரபரப்பு காரணம்! Representative Image

உண்மையான காரணம் என்ன?

கடந்த சனிக்கிழமை நண்பகல், 12 மணியளவில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை பார்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மற்றும் மேயர் உட்பட அமைச்சர்கள் காசிமேடு சென்றுள்ளனர். அங்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் 200 அடிக்கு முன்பாகவே முதலமைச்சர் காரில் இருந்து இறங்கி நடந்து சென்றுள்ளார். 

 

முதல்வர் கான்வாயில் ஃபுட்போர்டு அடித்த மேயர் பிரியா; வெளியானது பரபரப்பு காரணம்! Representative Image

முதலமைச்சர், மீனவர்களின் பாதிப்புகளை பார்த்துக் கொண்டே சென்றுள்ளார். முதலமைச்சர் வருவதற்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வருவதற்காக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, ஆர்.கே.நகர் எம்எல்ஏ எபினேசர் மற்றும் மேயர் ப்ரியா ஆகியோர் முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தில் ஏறி பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு, முதலமைச்சர் வருவதற்கு முன்பாக போய் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து ஆர்கேநகர் எம்எல்ஏவிடம் கேட்டபோது குறுகிய தூரம் என்பதால் முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனத்தில் ஏறி அவசரமாக நான்கு பேரும் வந்ததாக தெரிவித்துள்ளார். 

ஏதார்த்தமாக நடந்த விஷயத்தை பாஜக தொண்டர் படை சோசியல் மீடியாவில் ஊதிப்பெரிதாக்கி இருக்கிறது. இப்போது உண்மை தெரிந்ததும் மேயர் பிரியாவின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்