வீட்டில் உள்ள பாத்திரங்களை கழுவ பயன்படும் சிங்க்கை நம்மில் பலரும் கவனித்து சுத்தம் செய்வது இல்லை. பாத்திரங்கள் கழுவிய பிறகு, சிங்க்கை தண்ணீர் தெளித்து கழுவுவது வழக்கம். அப்படி செய்தால் எளிதில் பாக்கிடீரியாஸ் மற்றும் பாசிகள் பூஞ்சகள் வரும். அதை தவிர்க்க எப்பொழுதும் பாத்திரங்கள் கழுவிய பிறகு, சிங்க்கை கழுவ வேண்டும். அதை எப்படி சுத்தம் செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
✤ வினிகர்
✤ பேக்கிங் சோடா
✤ எலுமிச்சை சாறு
✤ வெந்நீர்
✤ துணி அல்லது ஸ்பாஞ்
✤ சோப் அல்லது சோப்பு நீர்
✤ ஹைட்ரஜன் ஃபெராக்ஸைடு
✤ பீங்கான் சிங்க்கில் உள்ள பாத்திரங்களாய் முழுவதுமாக எடுத்து வெளியில் வைத்து அதில் கழிவுகள் இருந்தால் அகற்றவும்.அதற்கு பின், வினிகர் அல்லது வெந்நீர் சேர்த்து நன்றாக ஊற வைக்கவும்.
✤ சுத்தம் செய்வதற்கு ,முதலில் வெந்நீர் ஊற்றி நன்றாக ஊறவைக்கவும் அல்லது வினிகர் ஊற்றி 20 முதல் 25 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
✤ 20 நிமிடங்களுக்கு பிறகு, அதில் ஹைட்ரஜன் ஃபெராக்ஸைடு தெளித்து 15 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும். அதன் பின் வெந்நீர் ஊற்றி நன்றாக கழுவவும்.
✤ அதிகளவில் அழுக்குகள் இருந்தால் அரை கப் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
✤ அதை அழுக்குகள் அதிகளவில் இருக்கும் இடங்களில் ஊற்றி 15 நிமிடங்கள் ஊற விடவும். அதற்கு பிறகு, அதில் பழை பிரஷ் பயன்படுத்தி தேய்த்து கழுவவும்.
✤ அதன் பின், சிங்க்கை முழுவதுமாக பாலிஷ் ஆக மாற்றுவதற்கு, முதலில் ஒரு துணியை எடுத்து சிங்க்கை முழுவதுமாக துடைத்து கொள்ளவும்.
✤ மற்றொரு துணியில் எலுமிச்சை எண்ணெய் இரண்டு செட்டுகள் ஊற்றி அந்த துணியை சிங்க்கில் முழுவதுமாக துடைத்து கொள்ளவும்.
✤ அதன் பின்,மற்றொரு துணியை எடுத்து நன்றாக சிங்க்கை முழுவதுமாக துடைத்தால் பளப்பளப்பாக மாறிவிடும்.
✤ முதலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டில் சிங்க்கை சுத்தம் செய்வதற்கு, முதலில் வெந்நீரில் சிறிதளவு சோப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
✤ சிங்க்கில் உள்ள பாத்திரத்தை முழுவதுமாக அகற்ற வேண்டும்.அதில் உள்ள காய்கறி கழிவுகளை அகற்றிய பின், அதில் வெந்நீருடன் கலந்து வைத்த சோப்பு நீரை எடுத்து சிங்க்கில் ஊற்றி கொள்ளவும்.
✤ அதை 15 முதல் 20 நிமிடங்களுக்கு பின்,அதை குளிர்ந்த நீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு, பாத்திரங்களை கழுவவும். இதை தினமும் செய்யலாம்.
✤ சிங்க்கிலிருந்து வெளியேரும் நீர் துளைகள் மற்றும் அவற்றை இணைக்கும் இணைப்புகளில் படிந்திருக்கும் அழுக்குகள் மற்றும் கழிவுகளாய் முழுவதுமாக அகற்றுவதற்காக அரை கப் அளவிற்கு பேக்கிங் சோடா மற்றும் கால் கப் எலுமிச்சை சாறு மற்றும் அரை கப் அளவிற்கு வினிகர் மற்றும் வெந்நீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
✤ அதில் ஊற்றி 15 முதல் 20 நிமிடங்களுக்கு பிறகு, குளிர்ந்த நீர் ஊற்றி கழுவினால் சுத்தமாகிவிடும்
✤ பல நாட்களாக பயன்படுத்தமால் இருக்கும் சிங்க்கை, முதலில் வெந்நீரை ஊற்றி 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.
✤ ஒரு டீஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா மற்றும் அரை கப் அளவிற்கு எலுமிச்சை சாறு மற்றும் வெந்நீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
✤ வெந்நீரில் ஊறவைத்த சிங்க்கில் கலக்கிய கலவையை ஊற்றி அதை 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
✤ அதன்பின் அதில் பழைய பிரஷ் எடுத்து சிங்க்கை முழுவதுமாக நன்றாக தேய்த்து கொள்ளவும் அதில் வெந்நீர் ஊற்றி கழுவிய பின், பாத்திரங்களை கழுவவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…