வீட்டில் செல்வம் சேர, மகிழ்ச்சியுடன் வாழ, நிம்மதியுடன் இருக்க என எத்தனையோ நன்மைகள் நடக்க வேண்டும் என வீட்டிற்கு வாஸ்துக்கள் பார்ப்பது வழக்கம். வீட்டை நாம் எப்படி பராமரித்து வைத்திருக்கிறமோ, அந்த வகையிலேயே வீட்டிற்கு செல்வம் சேரும். இதில் வீட்டில் எந்தெந்த பொருள்கள் வைத்திருக்குறோமோ, அவற்றைப் பொறுத்தும் செல்வம் சேரும் எனக் கூறுவர்.
நம் வீட்டில் எப்போதும் நேர்மறையான ஆற்றலே இருக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களும், அதன் ஆற்றலை அதிகரிப்பதோடு வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் தருகிறது. அது மட்டுமல்லாமல், நோயற்ற ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு வாஸ்து சாஸ்திரம் உதவும். வீட்டைக் கட்டும் போதும், புது வீடு குடிபோகும் போதும் வாஸ்து சாஸ்திர விதிமுறைகளின் படி இருக்க வேண்டும் என நினைப்பர். வீட்டில் இந்தப் பொருள்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற வழிமுறைகள் உள்ளது. அதனைப் பற்றி இங்குப் பார்க்கலாம்.
பொதுவாக, வீட்டின் நுழைவு வாயிலானது நேர்மறை மற்றும் எதிர்மறை என இரண்டையும் கடந்து செல்லக் கூடிய மையப்புள்ளியாகக் கருதப்படுகிறது.
இது வீட்டிற்குச் செல்ல உள்ளவர்களின் மகிழ்ச்சி, வளம், செழிப்பு போன்றவை நிரம்பிய இடமாக இருப்பதும் அவசியம். அதே போல, வீட்டிற்கு செல்லும் முன் கதவானது வட கிழக்கு திசை அதாவது சூரியன் உதிக்கும் இடமாக அமைய வேண்டும். காலை நேரத்தில் சூரிய ஒளி நம் வீட்டிற்குள் நுழைவது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
பொதுவாக திரைச் சீலைகளை தேர்ந்தெடுக்கும் போது, நடுநிலை நிறங்களில் உள்ளவாறு தேர்ந்தெடுக்க வேண்டும். இவற்றில் கருப்பு, வெள்ளை, வெளிர் வெண்மை, சாம்பல் உள்ளிட்டவை அடங்கும்.
இருளடங்கிய, கனமான திரைச்சீலைகளைப் பயன்படுத்தினால், எதிர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும் வகையிலேயே அமையும். எனவே இவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
இந்த எதிர்மறையான ஆற்றல்கள் நமக்கு துரதிஷ்டங்களை வெளிப்படுத்தும் வகையாக உள்ளது. எனவே, வீட்டில் திரைச் சீலைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாகச் செயல்பட வேண்டும்.
எதிர்மறை ஆற்றல் இருந்தால், உங்களது மனம் பாதிக்கப்படும். இதன் காரணமாக, குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாகலாம். உடல் நலம் சார்ந்த பாதிப்புகளும் ஏற்படும். எனவே, திரை சீலைகளை நிறம் பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
வீடு பிரகாசமாக இருக்கும் போது நேர்மறைத் தன்மையும் அதிகமாக இருக்கும். போதுமான அளவு வெளிச்சம் இல்லாத இருள் நிறைந்த வீடுகளில் எதிர்மறை ஆற்றல் தான் அதிகம் காணப்படுகிறது.
எனவே, வாஸ்து சாஸ்திரங்களின் படி வீட்டிற்குள் பிரகாசமான மின் விளக்குகளைப் பொருத்தி இருக்க வேண்டும். அதே போல, விளக்குகளைத் தேர்ந்தெடுக்கும் போதும், எதிர்மறை ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய மங்கிய ஒளி தரக்கூடிய சேதமடைந்த மின் விளக்குகள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
வீட்டில் மரச்சாமான்கள் பயன்படுத்தும் போது, அவற்றை ஒழுங்கான முறையில் வடிவமைக்கப்பட்டவற்றைப் பயன்படுத்துவது சிறப்பு. ஏனெனில், இவை நல்ல நேர்மறையான ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய அதிர்வுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக அமையும்.
வீட்டில் நாம் பயன்படுத்தும் மரச்சாமான்கள் குறைந்த எடை கொண்டவையாக இருப்பின், அவற்றை வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
எடை அதிகமாக உள்ள மரச்சாமான்களைப் பயன்படுத்தும் போது, அவற்றை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி வைக்கப்பட வேண்டும்.
வீட்டின் வாஸ்து, சாஸ்திர முறைகளின் படி வரவேற்பு அறையில் வைக்கக் கூடிய மரச்சாமான்கள் எப்போதும் செவ்வக அல்லது சதுர வடிவத்தில் இருப்பது வீட்டிற்கு நன்மையைத் தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…