பிரிட்ஜ் இப்பொழுது பலரும் பயன்படுத்துகின்றனர். அதில் எந்த பொருள்களை வைக்க வேண்டும் என்பதை விட எந்த பொருள்களை வைக்கக் கூடாது என்பதில் கவனம் தேவை. பலரும் பிடித்த பொருள்கள் அனைத்தையும் கூட பிரிட்ஜில் வைத்து எடுத்துச் சமையலுக்கு பயன்படுத்துவது மற்றும் சாப்பிடுவது எனப் பல செய்கிறார்கள். சில பொருள்கள் அதிகமாக வைத்துப் பயன்படுத்துவார்கள். அதனால் அதைத் தவிர்த்து எந்த பொருள்கள் பயன்படுத்தக்கூடாது எனப் பார்க்கவேண்டும். இந்த பதிவில் இந்த பொருள்களை பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தக்கூடாது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
✤ நாம் எப்பொழுது எந்த உணவுப்பொருள்களாக இருந்தாலும் குளிர்ச்சியாக வேண்டும் என்றால் உடனடியாக பிரிட்ஜில் வைத்து எடுத்துச் சாப்பிடுவது என்பது அனைவரும் செய்வது உண்டு.
✤ ஆனால் அது தவறு குளிர்ச்சியாக வேண்டும் என பிரிட்ஜில் அனைத்து பொருள்களும் வைக்காமல் எது வைக்கவேண்டும் எது வைக்ககூடாது எனத்தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று. அதனால் முதலில் எது வைக்கக் கூடாது எனத் தெரிந்து கொள்வோம். இதில் நான்கு பொருள்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
✤ பலரது வீட்டு பிரிட்ஜில் இது தான் முக்கியமாக இருக்கும் ஒரு பொருள் தான் தக்காளி. இதை அதிகமாக பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால் சீக்கிரமாக அழுகிவிடும். இதை காற்றோட்டம் உள்ள இடத்தில் சாதாரணமான வெப்பநிலையில் வைத்துப் பயன்படுத்தினால் இது மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை வைத்துப் பயன்படுத்த முடியும்.
✤ ஆனால் பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அது பழுத்து மற்றும் அழுகிப்போகும். அதனால் பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. பிரிட்ஜில் வைத்து எடுத்துச் சமைத்தால் அதில் உள்ள சுவைய தன்மை இருக்காது.
✤ தேன் என்பது நாம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒன்று தான். இது இயல்பாகப் பல நாட்கள் ஆனாலும் கெடாத ஒரு உணவுப் பொருள். அதனால் தேன்னை பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால் அது குளிர்ந்து கட்டியாகி விடும்.
✤ இதை எடுத்துச் சாப்பிடும் போது அதன் சுவையில் மாற்றம் தெரியும். அதை பிரிட்ஜில் வைக்காமல் கண்ணாடி பாட்டிலில் வைத்துப் பயன்படுத்தினால் அது சுவை மாறாமல் மற்றும் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
✤ இந்த வாழைப்பழத்தை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையிலிருந்தால் மட்டும் தான் பழுக்கும். அதை எடுத்து பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் ஆனாலும் பழுக்காது.
✤ அதை காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்தால் எளிதில் பழுக்கும். பிரிட்ஜில் வைத்துச் சாப்பிட்டால் வாழைப்பழத்தில் உள்ள சுவையில் அதிகமாக வேறுபாடு இருக்கும்.
✤ பிரெட் பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால் அது மிக விரைவில் கெட்டுப்போகும் மற்றும் அதில் உள்ள சத்துகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
✤ அதனால் பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சாதாரணமான காற்று உட்புகாத ஒரு பாட்டிலில் போட்டுப் பயன்படுத்த வேண்டும்.
✤ பிரிட்ஜில் பிரெட் வைத்துப் பயன்படுத்தினால் ஐஸ் ஆகா மாறிவிடும். அதில் உள்ள சத்துகள் குறைவதால் அதைச் சாப்பிட்டால் உடலில் பல பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
✤பிரிட்ஜில் பல பொருள்கள் வைத்துப் பயன்படுத்தக்கூடாது. அந்த பொருள்களில் சில பொருள்களைப் பற்றி இந்த பதிவில் பார்த்தோம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…