நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய சில உணவுப் பொருள்கள், நம் உடலுக்கு ஏதாவதொரு பலனைத் தருகின்றன. அந்த வகையில் கறிவேப்பிலையானது முடி வளர்ச்சிக்கும், முடி கொட்டுதலை தவிர்ப்பதுடன், கருப்பாக முடி வைத்திருக்கவும் உதவுகிறது.
உணவுப் பொருளாகப் பயன்படுத்தக் கூடிய கறிவேப்பிலையானது, பல்வேறு நன்மைகளைத் தருகிறது. ஆனால், நாம் இதைத் தான் சாப்பிடும் போது ஒதுக்கி வைப்போம். கறிவேப்பிலை மட்டுமல்லாமல், நாம் ஒதுக்கி வைக்கக் கூடிய பல்வேறு உணவுப் பொருள்கள் நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றன. அந்த வகையில், கறிவேப்பிலையானது முடி கொட்டுதலைத் தவிர்க்க உதவுகிறது. மேலும், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. கறிவேப்பிலையை முடிக்கு கீழ்க்கண்ட முறைகளில் பயன்படுத்துவதன் மூலம், முடி உதிர்தலைத் தவிர்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் நம் அனைவரும் சந்தித்து வரும் பிரச்சனைகளில் பொதுவானதாக இருப்பதில் தலைமுடி பிரச்சனையும் ஒன்றாகும். தலை முடி கொட்டுதல், வழுக்கை, முடி உடைதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எல்லோருமே அனுபவித்து வருகின்றனர். இதற்கான மருத்துவத்தில் கறிவேப்பிலையும் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. அதன் படி, கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவதன் மூலம், முடியை கருமையாக வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பார்க்கலாம்.
தேவையானவை
1-2 கப் அளவிற்கு தேங்காய் எண்ணெய்-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின், கையளவு கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இத்துடன், நெல்லிக்காய் இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லையெனில், கறிவேப்பிலையை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
செய்முறை
மேலே கூறப்பட்டவற்றை எடுத்துக் கொண்டு அதனை நன்கு தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
எண்ணெய் நிறம் மாறும் வரை கொதிக்க வைத்து, கறிவேப்பிலையும் கருமையாக மாற வேண்டும். நன்கு கொதித்ததும், அதனை ஆற வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின், தலைமுடியின் ஒவ்வொரு பகுதியாக எடுத்து, அதன் வேர்ப்பகுதியில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனை இரவு நேரத்தில் அப்ளை செய்து ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் ஷாம்பூ பயன்படுத்தி தலைக்குக் குளிக்கலாம்.
இவ்வாறு தொடர்ந்து வாரம் ஒரு முறை செய்து வர முடி கொட்டுவது குறைந்து விடும்.
தலைமுடிக்குத் தேவையான கறிவேப்பிலையை எடுத்துக் கொண்டு, அதில் மோர் ஊற்றி பேஸ்ட் போல மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை வேர்களில் படும் படி தடவி காய்ந்து கொட்டும் வரை ஊற வைக்க வேண்டும்.
அதன் பின், முடியை தண்ணீரில் அலசிவிட வேண்டும். இவ்வாறு வாரம் 1 அல்லது 2 முறை செய்து வர பொடுகு, பேன் தொல்லைகள் நீங்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…