சருமம் மற்றும் கேசத்தில் பல வகையான அழுக்குகள் மற்றும் வெளியில் செல்வதால் ஏற்படும் தூசிகள், மாசுகள் இது போன்று அனைத்து முகம் மற்றும் முடிகளில் படுவதால் மிகவும் கருமையாக மாறும். இதனால் புத்துணர்ச்சியாக இருக்கும் சருமம் மிகவும் கருமையாகவும்,பொலிவு இழந்து காணப்படுகிறது.
✤ இதனால் தலையில் பொடுகு தொந்தரவுகள் எனப் பல ஏற்படுகிறது. இதனைச் சரிசெய்வதற்கு வீட்டிலேயே நாம் தினமும் சாப்பிடும் ஒரு உணவை வைத்துச் சரிசெய்யலாம் என சொன்னால் உங்களால் நம்பமுடியுமா.
✤ அது தினத்தோறும் ஊறவைத்த அரிசியிலிருந்து வீணாகப் போகும் தண்ணீரைப் பயன்படுத்தி முகம் மற்றும் கேசத்தைப் பாதுகாப்பாகவும் மற்றும் அழகாகவும் மாற்றமுடியும். இதைத் தினம்தோறும் பயன்படுத்தினால் விரைவில் முகம் மற்றும் முடிகள் மிகவும் அழகாகவும், பாதுகாப்பாகவும்,பொலிவுடனும் இருக்கும். வீட்டிலேயே சரும ம் மற்றும் கேசம் மிகவும் பாதுகாப்பாகவும் மற்றும் அழகாகவும் மாற்றுவதற்கு ஊறவைத்த அரிசிநீரில் இருந்து எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
✤ ரோஸ்வாட்டர்-1/4கப்
✤ சோளமாவு – 1/2கப்
✤ ஊறவைத்த அரிசி நீர்- 1/2கப்
✤ முதலில் அரிசியை நன்றாக ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும். அடுத்த நாள் காலையில் அந்த ஊறவைத்த அரிசி நீரை அரை கப் அளவிற்கு வடித்து எடுக்கவும். அதில் வைட்டமின் ஈ மாத்திரைகளை ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகளைச் சேர்க்கவும்.
✤ அதை கேசம் முழுவதுமாக அப்ளை செய்ய வேண்டும். இதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் சேர்த்து வெளியில் செல்லும் போது இதை கேசத்தில் ஸ்பிரே செய்தும் பயன்படுத்தலாம்.
✤ இதைத் தலைமுடியில் சீரமாகவும் அல்லது எண்ணெய் ஆகவும் பயன்படுத்தினால் விரைவில் பொடுகு தொல்லைகள் சரியாகும்.
✤ இது முடிக்கு மட்டும் இல்லாமல் வெளியில் செல்லும் போது முகத்திற்குப் பயன்படுத்தலாம். இதனால் முகம் மற்றும் கேசம் மாசுகளிலிருந்து பாதுகாப்பாகவும் மற்றும் பொலிவுடனும் இருப்பதற்கு உதவும்.
✤ இது சேதம் அடைந்த கேசத்தை மேலும் சேதம் அடையாமல் பாதுகாக்கவும் மற்றும் வறண்ட தலைமுடியைக் கூட இதைப் பயன்படுத்துவதால் விரைவில் வறட்சி சரியாகி அழகாக மாறிவிடும்.
✤ இதில் கட்டாயமாக வைட்டமின் ஈ மாத்திரை பயன்படுத்த வேண்டும். இதனால் தலையில் உள்ள பொடுகு மற்றும் தலை வறட்சி போன்றவை கூட விரைவில் சரியாகும். இதை ஒரு வாரம் பயன்படுத்தினால் மாற்றங்கள் தெரியும்.
✤ முதலில் எந்த வகையான அரிசியாக இருந்தாலும் இதற்குப் பயன்படுத்தலாம். ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து அரிசியிலிருந்து வரும் நீரை வடிகட்டவும்.
✤ ஒரு பாத்திரத்தில் 1/2கப் அளவிற்குச் சோளமாவு சேர்த்து அத்துடன் தேவையான அளவிற்கு ரோஸ்வாட்டர் சேர்த்துக் கொள்ளவும்.
✤ அத்துடன் சிறிதளவு ஊறவைத்த நீரை ஊற்றி நன்றாகக் கட்டி சேராமல் பிசைந்து கொள்ளவும்.
✤ பிசையும் போது சிறிது சிறிதாகத் தண்ணீரைச் சேர்த்து நன்றாக முகத்திற்கு க்ரீம் போல் செய்து கொள்ளவும்.
✤ தயார் செய்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்வதற்கு முன்பாக, ஊறவைத்த நீரை காட்டன் துணி அல்லது பஞ்சையைத் தண்ணீரில் நனைத்து முகத்தில் மசாஜ் செய்யவேண்டும்.
✤ அதை ஒரு ஐந்து நிமிடங்கள் உலரவிடவும். அதன் பின், தயார் செய்த கலவையை முகத்தில் அப்ளை செய்யவும்.
✤ அதை 30 நிமிடங்கள் உலரவிடவும். அதற்குப் பின், முகத்தை ஒரு துணியில் முழுவதுமாக துடைத்த பிறகு, முகத்தைத் தண்ணீரில் கழுவ வேண்டும். இதைத் தினமும் அல்லது வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை செய்யலாம்.
✤ அரிசி ஊறவைத்த தண்ணீரை அப்படியே கூட முகத்தில் தினமும் அப்ளை செய்தால் ஒரு வாரத்தில் முகம் மிகவும் அழகாக மாறும். இது போன்று வீட்டிலேயே முகம் மற்றும் கேசத்தை மிகவும் அழகாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…