தமிழ் மாதத்தில் பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாளே "பங்குனி உத்திரம்". முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம், பரமேஸ்வரம் பார்வதி திருக்கல்யாணம், வள்ளிப்பிராட்டியின் அவதாரம், சுவாமி ஐயப்பனின் அவதாரம் எனப் பல்வேறு சிறப்புகளை உடையது இந்த பங்குனி உத்திர திருநாள். இந்த நாளில்தான் சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி அளித்தார் என்று புராணங்கள் கூறுக்கின்றன. இத்தகைய சிறப்புகளை உடைய பங்குனி உத்திர திருநாளை மேலும் சிறப்பாக்க பங்குனி உத்திரம் வாழ்த்துக்கள் படங்களை பதிவு செய்துள்ளோம். அவற்றில் தங்களுக்கு பிடித்தமானவற்றை டவுன்லோடு செய்து பயனடையுங்கள்.
1. உன் மனதின் தரத்தை பொறுத்தே உன் வாழ்வு..
உன் எண்ணங்களின் தரத்தை பொறுத்தே உன் ஆனந்தம்..
பங்குனி உத்திரம் வாழ்த்துக்கள்!
3. ஆறுபடை முருகன் ஆசியுடன் இந்த நாள் இனிதாக மலரட்டும்..
முருகன் அருள் புரியட்டும்..
பங்குனி உத்திரம் வாழ்த்துக்கள்!
4. வேல் உண்டு வினை இல்லை..
மயில் உண்டு பயம் இல்லை..
குகன் உண்டு குறை இல்லை..
கந்தன் உண்டு கவலை இல்லை..
பங்குனி உத்திர திருவிழா நல்வாழ்த்துக்கள்!
5. முருகா என்ற மூன்றெழுத்து மந்திரத்தை முழு மூச்சாய் கொண்டிருந்தால்..
முக்காலமும் முன்னின்று காத்தருள்வார்..
பங்குனி உத்திர திருவிழா நல்வாழ்த்துக்கள்!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…