நவராத்திரி தினத்தின் இரண்டாம் நாள் துர்கை உக்கிரமான கோலத்தில் இருப்பாள். எதிரிகளிடம் உக்கிரத்தையும் பக்தர்களிடம் கருணையும் துர்க்கை கொண்டவள். நம் முன்னோர்கள் போருக்கு முன்னாள் வழிபட்ட கொற்றவையும் துர்க்கையின் அம்சமாகும். இவ்வாசகத்தில் நவராத்திரி இரண்டாம் என்ன பிரசாதம் செய்து எந்த திருமந்திரம் உச்சரித்து அம்மாளை ஆராதிப்பது என்பதைக் காணலாம்.
நவராத்திரி இரண்டாம் நாள் (Second Day Of Navratri Puja)
இன்று நவராத்திரி இரண்டாம் நாள் நம் வீட்டில் பூஜிக்க வேண்டிய இறைவி வராஹி தேவி ஆகும். பன்றி முகமும் தெத்து பற்களும் கொண்ட தெய்வம் வராஹி தேவி. தன் தெத்து பற்களால் உலக சுமக்கும் இவளுக்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற பல திருநாமங்கள் உண்டு. கையில் சூலத்திஅக் கண்டு பக்தர்களைக் காக்கும் தெய்வம் ஆகும்.
நவராத்திரியில் அம்மனுக்கு 9 நாட்கள் வரை என்னென்ன பிரதாசங்கள் படைக்கலாம்...
பூஜைக்கு முன்னால் கட்டம் வடிவில் கோலமிட்டு அம்மனுக்கு முல்லை மலர்கள் கொண்டு அலங்கரித்து பூஜை செய்தல் வேண்டும். பூஜையில் மாம்பழம் வைத்து அம்மாளுக்கு மஞ்சள் நிற ஆடையில் அலங்கரிக்க வேண்டும். அம்மனுக்கு கல்யாணி ராகத்தில் இசை வாசித்து பூஜிப்பது நன்மை அளிக்கும். மனதில் தைரியம் பிறக்க நவராத்திரி தினத்தன்று கீழ்வரும் மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.
நவராத்திரியில் இந்த மலர்களை கொண்டே அம்பாளுக்கு பூஜை செய்ய வேண்டும்..
மந்திரம் (Navarathri Second Day Mantra):
ஓம் ச்யாமளாயை விக்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
வணங்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் (Navratri Second Day):
கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி
பிரசாதம் (Second Day Of Navratri Prasadam):
இன்றைய தினம் புளி சாதம் செய்து பிரசாதமாக வைத்து நைவேத்தியம் செய்தல் வேண்டும். பூஜையை முடித்த பின்னர் குழந்தைகளுக்கு பிரசாதம் முதலில் அளிப்பது நன்மை பகுக்கும்.
யார் யார் வணங்க வேண்டும், என்ன பிரசாதம் செய்ய வேண்டும், சொல்ல வேண்டிய மந்திரம்
1st நாள் | 4th நாள் | 7th நாள் |
2nd நாள் | 5th நாள் | 8th நாள் |
3rd நாள் | 6th நாள் | 9th நாள் |
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…