Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

Navratri Fifth Day : நவராத்திரி 5வது நாள் எந்த நட்சத்திரக்காரர் வணங்குவது நன்மை..?

Manoj Krishnamoorthi September 21, 2022 & 16:45 [IST]
Navratri Fifth Day : நவராத்திரி 5வது நாள் எந்த நட்சத்திரக்காரர் வணங்குவது நன்மை..?Representative Image.

நவராத்திரி தினத்தின் ஐந்தாம் நாள் சிவனின் அம்சமான மகேஸ்வரி தேவிக்கு உரியதாகும். சிவ பெருமானின் சக்தியைக் கொண்ட மகேஸ்வரி தேவி பெரும் சரீரம் கொண்ட தர்மத்தின் திருவுருவம் ஆகும். இவ்வாசகத்தில் நவராத்திரி ஐந்தாம் நாள்  (Navratri Pooja 2022)  மகேஸ்வரி தேவிக்கு என்ன பிரசாதம் செய்து எந்த திருமந்திரம் உச்சரித்து அம்மாளை எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆராதிப்பது என்பதைக் காணலாம்.  

நவராத்திரி ஐந்தாம் நாள் பூஜை (Fifth Day Of Navratri Puja)

தர்மத்தின் திருவுருவான மகேஸ்வரி தேவியை வழிபடுவதால் நமக்கு சாந்தமான மனநிலை கிடைக்கும். இவள் அம்பிகையின் மற்றொரு சொரூபமாக காட்சி அளிக்கிறார். ரிஷப வாகனத்தில் அமர்ந்து ஐந்து முகங்களும் மூன்று கண்களும் கொண்டு சிவனின் சக்திகளைக் கொண்ட ஆதிசக்தி ஆகும். இவளின் பத்து கரங்கள் கொண்ட இவள் திரிசூலம், வாள், பரசு, வஜ்ரம் போன்ற ஆயுதங்களை ஏந்தி பிறைச்சந்திரன் மற்றும் பாம்பை தரித்து ரிஷபத்தில் அமர்ந்திருப்பது ஈசனை போல் இருக்கும். 

நவராத்திரி ஐந்தாம் நாள் வில்வ இலை மற்றும் மரிக்கொழுந்து வைத்து வெண்ணிற ஆடை தரித்து அம்மாளை அலங்கரித்து பூஜைக்கு தயார் செய்ய வேண்டும். பூஜையின் போது அடாணா ராகத்தில் இசை அமைப்பது அம்மனுக்கு உகந்தது ஆகும். ஜாதகத்தில் லக்கினம், கேந்திரம் மற்றும் திரிகோணத்தில் புதன் அல்லது கேது இருக்கும் நபர்கள் இந்த பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு நவராத்திரி ஐந்தாம் நாள் பூஜை செய்வது வறுமை நீங்கி  இன்பமான வாழ்க்கை வாழ வழிசெய்யும். பூஜைக்கு பிறகு மஞ்சள் குங்குமத்தை பிரசாதமாக அளிக்க வேண்டும். 

மந்திரம் (Navarathri Fifth Day Mantra): 

ஓம் மாம் மாஹேச்வர்யை நம

ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்

வணங்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் (Navratri Fifth Day):  

ஆயில்யம், கேட்டை, ரேவதி

பிரசாதம் (Fifth Day Of Navratri Prasadam):

இன்று பிரசாதமாக அம்மனுக்கு புளியோதரை மற்றும் இனிப்பு வகையில் உளுந்தன்னம் செய்து பூஜையில் நைவேத்தியமாக படைக்க வேண்டும்.  மஞ்சள் மற்றும் குங்குமம்.

 

யார் யார் வணங்க வேண்டும், என்ன பிரசாதம் செய்ய வேண்டும், சொல்ல வேண்டிய மந்திரம் 

1st நாள்  4th நாள் 7th நாள்
2nd நாள் 5th நாள் 8th நாள்
3rd நாள் 6th நாள் 9th நாள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்