முருகப் பெருமானைப் போற்றும் வகையில் பாடப்படும் தென் பழனித் தேடி பாடல் வரிகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். இந்தப் பாடலைக் கேட்கும் போதே, நம்முடைய உடல், மனம் என அனைத்தும் முருகப் பெருமானையே எண்ண வைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பாடலைக் காணலாம்.
தென் பழனித் தேடி உன் தென் பழனித் தேடி
திருநீரு பூசி நான் ஓடோடி வந்தேன்.!
திருநீரு பூசி நான் ஓடோடி வந்தேன்.!
ஒவ்வொரு மாசம் உன் திருக்கோவில் முன்னே..
உற்சவம் காண உன் படியேறி வந்தேன்…
உற்சவம் காண உன் படியேறி வந்தேன்…
குமரேசா முருகேசா உன்னைத் தேடி வந்தேனே…
அலங்காரம் அபிஷேகம் அழகாகக் கண்டேனே…
ஜெய வேல் வேல் ஜெய வேல் வேல் வடிவேல் வேல் வடிவேல் வேல்
ஜெய வேல் வேல் ஜெய வேல் வேல் வடிவேல் வேல் வடிவேல் வேல்
தென் பழனித் தேடி உன் தென் பழனித் தேடி
திருநீரு பூசி நான் ஓடோடி வந்தேன்.!
திருநீரு பூசி நான் ஓடோடி வந்தேன்.!
(இசை)
தைப்பூசத் தேரில் உன் தைப்பூசத் தேரில்
என் வீடு தேடி நீ வருவாயோ வேலா…
என் வீடு தேடி நீ வருவாயோ வேலா…
மணி ஓசை கூட நல்ல மணி ஓசை கூட
பேரழகாக உன் தேரோட்டம் கண்டேன்
பேரழகாக.. தங்கத் தேரோட்டம் கண்டேன்..
கதிரேசா.. அழகேசா.. உன் கோவில் வந்தேனே…
தேரோட்டம் உன்னாலே கொடியேற்றம் கண்டேனே…
ஜெயவேல் வேல் ஜெயவேல் வேல் வடிவேல் வேல் வடிவேல் வேல்
ஜெயவேல் வேல் ஜெயவேல் வேல் வடிவேல் வேல் வடிவேல் வேல்
தென் பழனித் தேடி உன் தென் பழனித் தேடி
திருநீரு பூசி நான் ஓடோடி வந்தேன்…
திருநீரு பூசி நான் ஓடோடி வந்தேன்….
(இசை)
பங்குனி மாசம் நல்ல இளவேனிற் காலம்
பழனிக்கு வந்தா உன் தெய்வீக யோகம்
பழனிக்கு வந்தா உன் தெய்வீக யோகம்
உத்திரை நாளில் உன் உற்சவத் திருத்தேரில்
சிங்காரமாக உன் அலங்காரம் கண்டேன்
அலங்காரம் காண நான் ஆனந்தம் ஆனேன்..
கைலாசன் மகராசா உன் வாசல் வந்தேனே..
குளிரான பன்னீரால் அபிஷேகம் கண்டேனே…
ஜெயவேல் வேல் ஜெயவேல் வேல் வடிவேல் வேல் வடிவேல் வேல்
ஜெயவேல் வேல் ஜெயவேல் வேல் வடிவேல் வேல் வடிவேல் வேல்
தென் பழனித் தேடி உன் தென் பழனித் தேடி
திருநீரு பூசி நான் ஓடோடி வந்தேன்…
திருநீரு பூசி நான் ஓடோடி வந்தேன்…
(இசை)
வைகாசி மாசம் விசாக நன்னாளில்
கைலாயன் கண்ணில் நீ பிறந்தாயே வேலா…
கைலாயன் கண்ணில் நீ பிறந்தாயே வேலா…
ஈரைந்து நாளும் உன் பழனிக்கு வந்தேன்…
வழிபாடும் செஞ்சி உன் புறப்பாடும் கண்டேன்…
பொன்பவனித் தேரில் உன் புறப்பாடும் கண்டேன்…
நடராசன் மகராசா உன் வீடு வந்தேனே…
வெடிதான பாலாலே அபிஷேகம் கண்டேனே…
ஜெயவேல் வேல் ஜெயவேல் வேல் வடிவேல் வேல் வடிவேல் வேல்
ஜெயவேல் வேல் ஜெயவேல் வேல் வடிவேல் வேல் வடிவேல் வேல்
தென் பழனித் தேடி உன் தென் பழனித் தேடி
திருநீரு பூசி நான் ஓடோடி வந்தேன்…
திருநீரு பூசி நான் ஓடோடி வந்தேன்…
(இசை)
ஐப்பசி மாசம் உன் காப்பு கட்டும் நாளில்
சந்நிதி வாசல் உன் துவார பாலருக்கு
பாவாடை சாத்தும் வழிபாடும் கண்டேன்
வாழைத்தண்டோடு கீழே சாதத்தைக் கொட்டி
அகத்திக்கீரையோடு நல்ல படையலும் போட
சூரசம்ஹாராம் நான் ஆறாம் நாள் கண்டேன்
அழகேசா முருகேசா உன் தேசம் வந்தேனே..
மூவாறு நீராலே நீராட்டம் கண்டேனே..
ஜெயவேல் வேல் ஜெயவேல் வேல் வடிவேல் வேல் வடிவேல் வேல்
ஜெயவேல் வேல் ஜெயவேல் வேல் வடிவேல் வேல் வடிவேல் வேல்
தென் பழனித் தேடி உன் தென் பழனித் தேடி
திருநீரு பூசி நான் ஓடோடி வந்தேன்…
திருநீரு பூசி நான் ஓடோடி வந்தேன்…
(இசை)
பட்டாடை பூட்டி பூமாலைகள் சூட்டி
கற்பூரம் ஏத்தி, தீப ஆராத்தி காட்டி
கற்பூரம் ஏத்தி, தீப ஆராத்தி காட்டி
நவராத்திரி நாளில் உன் முத்துப் பல்லாக்கில்
உற்சவ மூர்த்தி இங்கே கொழுவிருக்கக் கண்டேன்
உற்சவ மூர்த்தி இங்கே கொழுவிருக்கக் கண்டேன்
நடராசன் மகராசா உன்னைக் கொழுவில் கண்டேனே
இசையோடு புகழ் பாடி பேரின்பம் ஆனானே..
ஜெயவேல் வேல் ஜெயவேல் வேல் வடிவேல் வேல் வடிவேல் வேல்
ஜெயவேல் வேல் ஜெயவேல் வேல் வடிவேல் வேல் வடிவேல் வேல்
தென் பழனித் தேடி உன் தென் பழனித் தேடி
திருநீரு பூசி நான் ஓடோடி வந்தேன்…
திருநீரு பூசி நான் ஓடோடி வந்தேன்…
(இசை)
கார்த்திகை மாசம் உன் சாது மட ஓரம்
ஊர்வலமாக உன் அலங்காரம் போகும்
ஊர்வலமாக உன் அலங்காரம் போகும்
திருவாடைப் பூட்டி நல்ல தீபஸ்தம்பம் மேலே
பெருவிளக்கேற்ற நான் பேரின்பம் கண்டேன்…
பெருவிளக்கேற்ற நான் பேரின்பம் கண்டேன்…
கதிரேசா குமரேச ரட்சப் பொட்டு கண்டேனே..
நலமாக நான் வாழ பல யோகம் கண்டேனே…
தென் பழனித் தேடி உன் தென் பழனித் தேடி
ஜெயவேல் வேல் ஜெயவேல் வேல் வடிவேல் வேல் வடிவேல் வேல்
ஜெயவேல் வேல் ஜெயவேல் வேல் வடிவேல் வேல் வடிவேல் வேல்
திருநீரு பூசி நான் ஓடோடி வந்தேன்…
திருநீரு பூசி நான் ஓடோடி வந்தேன்…
திருநீரு பூசி நான் ஓடோடி வந்தேன்….!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…