ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களின் மாற்றங்களுக்கும் முக்கியத்துவம் இருந்தாலும், சனி பகவானின் ராசி மாற்றத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. ஏனென்றால், சனிப்பெயர்ச்சி ஒரு மனிதனின் வாழ்க்கையில் அதிகப்படியான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. இதனால், ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட பயப்படுவார்கள். அந்தவகையில், வருகின்ற ஜனவரி 17, 2023 அன்று இரவு 08.02 மணிக்கு சனிபகவான் மகர ராசியில் இருந்து தனது சொந்த ராசியான கும்பத்திற்கு வக்ர நிலையில் பிரவேசிக்கவுள்ளார். இதன் காரணமாக ஏற்படும் தாக்கத்தால் கும்ப ராசிகாரர்களுக்கு கலவையான பலன்கள் காணப்படும்.
பொதுவாக, ஒவ்வொரு சனி பெயர்ச்சியிலும் மூன்று ராசிகள் ஏழரை சனியை எதிர்கொள்கின்றன. அந்தவகையில், மகர ராசிக்கு ஜென்ம சனி முடிந்து ஏழரை சனியின் கடைசி பகுதி தொடங்குகிறது. கும்ப ராசிக்கு விரைய சனி முடிந்து, ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது. மீன ராசிக்கு லாப சனி முடிந்து, விரைய சனி தொடங்குகிறது.
இருப்பினும், சொந்த ராசியான கும்பத்திற்கே பாதிப்பு அதிகம் இருக்கும். அதாவது, இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் சனியின் பார்வை கும்ப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 3வது, 7வது மற்றும் 10வது வீட்டில் இருக்கும். அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் கும்ப ராசியை சேர்ந்த மாணவர்கள் தங்கள் இலக்குகளிலிருந்து விலகிச் செல்வார்கள்.
மேலும் வேலை செய்பவர்களுக்கு திடீர் தடைகள் ஏற்படும். அதேபோல், ஏழாம் வீட்டில் சனியின் அம்சம் இருப்பதால், கும்ப ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையிலும் பிரச்சினைகள் எழும். கணவன் - மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு எழலாம். அதிக கோபத்தின் காரணமாக உறவுகளிடம் அடிக்கடி சண்டைகள் வரக்கூடும். திருமணமாகாத கும்ப ராசிகாரர்களுக்கு திருமணம் தாமதமாகலாம்.
இருப்பினும், சனியின் பார்வை 10வது வீட்டில் இருப்பதால், ஒரு சில சுப பலன்களை உங்களுக்கு கொடுப்பார். இந்த காலகட்டத்தில் சனி உங்களை நல்ல செயல்களைச் செய்பவராக மாற்றுவார். உங்க ராசியின் அதிபதியாக இருப்பதால், தாக்கம் அவ்வளவாக இருக்காது. எனவே, முறையான பரிகாரங்களை பின்பற்றுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…