மக்களின் செயல்களுக்கு ஏற்ப கர்ம பலனை அளிப்பதால் சனி பகவான் நீதி கடவுள் என்று அழைக்கப்படுகிறார். ஆனால் இது புரியாமல் மக்களோ சனி பகவான் பாத்தாலே துன்பங்கள் வரும் என்று தவறாக கருதுகின்றனர். நாம் வணங்கும் கடவுள்களுள் சனீஸ்வரர் தான் மிகவும் இலகுன மனப்பானை கொண்டவர். இருப்பினும் சனி திசை மற்றும் ஏழரை சனி நடக்கும் காலங்களில் கர்ம வினைக்கு ஏற்ப சோதனை காலம் தொடங்கும்.
ஆனால் சனி பகவானின் அருள் பார்வையானது எப்போதும் சில ராசிகள் மீது இருக்குமாம். அந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் சோதனை காலங்களும் எளிமையாக கடக்க நேரிடும். இது ஜோதிட சாஸ்திரத்தின் படி சொல்லப்படும் வாக்காகும். எனவே, அந்த 5 ராசியினர் மட்டும் ஏழரை சனி மற்றும் சனி திசை நடக்கும் காலங்களில் அதிக சோதனையை அனுபவிக்காமல் குடும்பத்தில் மகிழ்ச்சி, வரவு உள்ளிட்ட நன்மைகளுடன் இருப்பார்கள்.
இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். இருந்தாலும் ரிஷப ராசியினருக்கு சுக்கிரனுடன் சனி பகவானும் கருணை பார்வை அளிப்பார். எனவே, சோதனை காலங்களில் கூட பிரச்சனைகள் சுமூகமாக கடந்து விடும். மேலும் அந்த சனி திசை மற்றும் ஏழரை சனி காலங்கள் இவர்களுக்கு சாதகமாக அமையும். அதனால் அவர்களுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், பேர் புகழ் என்று அனைத்தும் கிட்டும்.
இயல்பாகவே துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பெரிதாக தொந்தரவு கொடுப்பதில். துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் மற்றும் சனியின் அருள் பார்வையும் இவர்களுக்கு கிடைக்கும். மேலும் அவர்களின் ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் நிலைமை அசுபமாக இல்லை என்றாலும், ஏழரை சனியில் பெரிதாக தாக்கம் ஏற்படாது. அது மட்டும் இன்றி சுக்கிரன் மற்றும் சனியின் அருளால் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
கும்ப ராசியின் அதிபதியே சனி என்பதால் இவர்கள் மீது சற்று இரக்கம் காட்டுவார். என்ன தான் அவ்வப்போது இன்னல்கள் ஏற்பட்டாலும் சனியின் பார்வை பட்டதும் எல்லாம் மறைந்து விடும். இந்த ராசிக்காரர்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகமாட்டார்கள். இவர்களின் தொழில், வேலை வளர்ச்சியடையும். அதனால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இவர்களுக்கும் ஏழரை சனி, அஷ்டம சனி, சனி திசை காலங்களில் சனி பகவான் கை கொடுத்து காப்பாற்றுவார்.
சனி பகவானுக்கும் தனுஷ் ராசியின் அதிபதியான குரு பகவானுக்கும் சுமூகமாக உறவு இருப்பதால் இவர்களுக்கு சனி எந்த பாதகமும் அளிப்பதில்லை. மேலும் சனி திசை, ஏழரை சனி காலங்களில் இவர்களுக்கு சாதகமாக வேலை, பதவி, வரவு உள்ளிட்ட அனைத்தையும் தருவார். அந்த கடினமான காலங்கள் மற்றவர்களை விட இவர்களுக்கு சற்று குறைவாகவே இருக்கும்.
இவர்களுக்கும் சனி பகவான் அதிபதி என்பதால் இவர்களும் சோதனை காலங்களை எளிதில் கடப்பார்கள். மேலும் இந்த சனி பெயர்ச்சியில் மகர ராசியை விட்டு வெளியேறுவதால்சனி பகவான் தாராளமாக கொடுப்பார். இவர்களுக்கு வர வேண்டிய வெற்றி, வரவு, வளற்சி ஆகியவற்றை தன்னுடைய அருளால் தருவார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…