ஒவ்வொரு புதுவருடத்தின் போதும் எதற்காக காத்திருப்போமோ இல்லையோ, இந்த வருடமாவது நமக்கு கடன் பிரச்சனை தீருமா? தனவரவு சிறக்குமா? என்று நம்மில் பலரும் காத்திருப்போம். அதன்படி, வருகின்ற 2023 புத்தாண்டில் நடைபெறும் கிரகங்களின் மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கை நல்ல மாற்றம் ஏற்பட இருக்கிறது. அந்தவகையில், 2023 ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்கள் கோடீஸ்வரராக வாய்ப்பு உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. வாங்க, அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்று தெரிந்துக் கொள்ளலாம்.
நினைத்தது எல்லாம் நடக்கும் ஆண்டு. தொட்டது அனைத்தும் துலங்கும். குருவின் பார்வை 7 ஆம் வீட்டில் நேரடியாக விழுவதால் உங்களுக்கு வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல், பிரச்சனை அனைத்தும் குறைந்து லாபம் இருமடங்காக உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றுமையும், பாசமும் அதிகரிக்கும். பிப்ரவரி முதல் இந்த வருடத்தின் கடைசி வரை முதலீடு செய்ய நல்ல நேரம். அதேபோல், வேலை தேடுபவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே, பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், அங்கீகாரமும் கிடைக்கும்.
இந்த புத்தாண்டில் ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி குரு மீனத்தில் இருந்து மேஷத்திற்கு இடம் பெயர்வதால், குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய வீடுகளில் நல்ல பலன்களை கொடுக்கப் போகிறது. அந்தவகையில், 9 ஆவது வீட்டில் குருவின் பார்வை நேரடியாக படுவதால், உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் வருடமாக இருக்கப்போகிறது. கடின உழைப்புக்கு தயங்காத உங்களுக்கு தொழில் மற்றும் செல்வம் ரீதியாக நல்ல பலன் கிடைக்கும். தொட்டது துலங்கும். எனவே, நீங்க எந்த புதிய முயற்சிகளில் ஈடுபட்டாலும் வெற்றி நிச்சயம்.
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே.. இந்த ஆண்டு ராகுவின் முழு ஆசியையும் பெறவிருக்கிறீர்கள். தொழில் மற்றும் வணிகத்தில் சிறந்து விளங்குவார்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். உங்க வெற்றிக்கு உங்களின் குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும். அதே நேரத்தில், ரிஷபத்தை ஆளும் கிரகமான சனியின் அதிர்ஷ்ட பார்வையை பெற நீங்க கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.
குருவின் பார்வை 11 ஆம் வீட்டில் விழுவதால் உங்களுக்கு நல்ல தொழில் லாபம் கிடைக்கும். வீட்டில், இருந்த மனக்கஷ்டங்கள் அனைத்தும் விலகும். புதிய தொழில் மற்றும் வணிகத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், ஏப்ரல் மாதத்திற்கு பிறகு எல்லாமே சுபம் தான். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். சிலருக்கு வீடு, மணை வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கப் பெறுவீர்கள். சுயதொழில் செய்யும் கும்ப ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.
பிறப்பிலேயே நல்ல அதிர்ஷ்டத்துடன் பிறந்த சிம்ம ராசிக்காரர்களே.. உங்களுக்கு இந்த வருடம் அற்புதங்கள் நிறைந்த வருடமாக இருக்கப் போகிறது. மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. மேஷ ராசிக்கு குரு சஞ்சாரம் செய்வதால், குருவின் பார்வை 5 ஆம் வீடான சிம்மத்தின் மீது விழுவதால் உங்களுக்கு இன்னும் பல மடங்காக அதிகரிக்கும். தொழிலில் இருந்து வந்த போட்டிகள் குறையும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…