மாசி மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மாசி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், ரிஷபத்தில் செவ்வாய் பகவான், துலாம் ராசியில் கேது பகவான், மகர ராசியில் புதன் பகவான், கும்ப ராசியில் சனி மற்றும் சூரிய பகவான், மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் பகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சுக்கிர பகவான் மாசி மாதம் 3 ஆம் தேதி கும்பத்திலிருந்து மீனத்திற்கும், மாசி 28 ஆம் தேதி மீனத்திலிருந்து மேஷத்திற்கும் பெயர்ச்சியடைகிறார். அதேபோல், மாசி 15 ஆம் தேதி புதன் பகவான் மகர ராசியிலிருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியடைகிறார். மாசி 28 ஆம் தேதி செவ்வாய் பகவான் மேஷத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் மாசி மாதத்தில் ரிஷப ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
ரிஷப ராசியினர்களே உங்களுடைய ராசி நாதர் சுக்கிர பகவான் உச்சத்தில் இருப்பதால் நீங்கள் தொட்டது எல்லாம் வெற்றியை காணும் நேரமாக அமையும். உங்க ஜாதகத்தில் திசா புத்தி நடக்கும் நபர்களுக்கு இந்த மாசி மாதம் பொன்னான மாதமாக இருக்கும். சனி பகவான் தொழில் ஸ்தானத்திலும், புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திலும், குரு பகவான் லாப ஸ்தானத்தின் அதிபதியாகவும் இருக்கிறார். இந்த மாசி மாத்தில் அனைத்து கிரகங்களும் ரிஷப ராசியினருக்கு அமைந்துள்ளது.
கடந்த மாதத்த்தில் ரிஷப ராசியினருக்கு செவ்வாய் மிகவும் உக்கிரமாக இருந்ததால் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறாமலே இருக்கலாம். அல்லது நீண்ட காலத்திற்கு இழுபறியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் மன சங்கடங்களில் இருந்திருக்கலாம். மேலும் வேலை செய்யும் இடத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம். இருப்பினும் இந்த மாசி மாதத்தில் செவ்வாய் பகவான் வக்கிர நிவர்த்திப் பெற்று நேர் வழியில் சஞ்சாரம் செய்கிறார். ஆகையால் உங்களுக்கு தலை வழியாக இருந்து அனைத்து சூழ்நிலைகளும் உங்களுக்கு சாதகமாக அமையும்.
சுக்கிர பகவானின் உங்கள் ராசிக்கு உச்சத்தில் இருப்பதால் பண வரவு அதிகமாகும். வேலை மற்றும் தொழில் சார்ந்த இடங்களில் உங்களுக்கு லாபம் ஏற்படும். திருமணம் அமைப்பு வராமல் நீண்ட காலமாக இருக்கும் ரிஷா ராசியினருக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி வரும். அதே போல திருமணம் ஆன தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக சனியின் தாக்கத்தால் துன்பங்களை அனுபவித்த ரிஷப ராசியினருக்கு இனி சனி பகவான் நன்மையை தருவார். கடன் தொல்லைகள் முற்றிலும் நீங்கும். நீண்ட காலமாக வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாள் அவை உங்களுக்கு சாதகமாக அமையும்.
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உடல் நலம் சார்ந்த விஷயத்தில் முன்னேற்ற ஏற்படும். வேலை அல்லது எந்த தொழில் செய்தாலும் அதில் கடுமையாக உழைக்கும் மாதமாக அமையும். உடன் இருப்பவர்களின் ஆதரவால் கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலை மாற்றம் குறித்த சிந்தனையில் இருந்தால் இந்த மாதம் அதற்கு உகந்த மாதமாக அமையும். கல்வியில் இன்னும் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள்.
வணங்க வேண்டிய தெய்வம்: பார்வதி தேவி
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 5
சந்திராஷ்டம நாள்: மாசி 3 ஆம் தேதி இரவு 08.38 மணி முதல் மாசி 5 ஆம் தேதி இரவு 11.20 மணி வரை
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…