ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள் என்பதை அனைத்து துறையிலும் நிரூபித்து வருகின்றனர். இன்றைய காலத்தில் பெண்கள் இல்லாத துறையே இல்லை. அந்தவகையில், பெண்களின் பெருமை, தன்நம்பிக்கை, தைரியம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. திறமை, முயற்சி, உழைப்பு என இருந்தாலும் ஜோதிடத்தின்படி குறிப்பிட்ட ராசியை சேர்ந்த பெண்கள் எந்த துறையில் இருந்தாலும் அங்கு தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வலுவானவர்களாக இருப்பார்களாம். அப்ப உங்க ராசியும் இதில் இடம்பிடித்திருக்கிறதா என்று பாருங்கள்.
கும்ப ராசிப் பெண்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள். எப்போதும் ஒரு புதிய திட்டங்களையும், யோசனைகளையும் கொண்டிருப்பார்கள். எவரை பார்த்தும் காப்பி அடிக்கமாட்டார்கள். அதேபோல், இவர்கள் சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றி கவலைப்படவே மாட்டார்கள். தனக்கு என்ன தோன்றுகிறதோ, அதை மட்டுமே செய்வார்கள். இவர்களை பற்றி அவ்வளவு எளிதில் புரிந்துக் கொள்ள முடியாது. ஆனால், ஒருமுறை இவர்களுக்கு பிடித்துவிட்டால் அவர்களுக்கு என்னவேண்டுமானாலும் தையங்காமல் செய்வாராம். இவர்களின் புத்திக்கூர்மை மற்றும் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறையால் எந்த துறையிலும் சிறந்து விளங்குவார்கள்.
ரிஷப ராசியை சேர்ந்த பெண்கள் லட்சியவாதிகள். இவர்கள் அவர்களின் தற்போதைய சூழ்நிலையை மேம்படுத்துவதற்காக எந்த லெவலுக்கும் செல்வார்களாம். இவர்களை எவ்வளவு தான் தாழ்த்தினாலும், அவர்களின் நோக்கங்களை நோக்கி விடாமுயற்சியுடன் முன்னேறி கொண்டே இருப்பார்களாம். இவர்கள் எப்போதும் தங்கள் வேலைகளை பக்காவாக பிளான் செய்து தான் செய்வார்களாம். அதுமட்டுமல்லாமல், இந்த ராசிக்கார பெண்கள் ஒரு விஷயத்தை செய்ய முடிவெடுத்துவிட்டால், எத்தனை தடை இருந்தாலும் வெற்றி பெறாமல் பின்வாங்கவே மாட்டார்களாம். குறிப்பாக, எவ்வளவு மனஅழுத்தம் இருந்தாலும் அசால்ட்டாக கடந்து செல்வார்களாம்.
விருச்சிக ராசியை சேர்ந்த பெண்கள் அதிகாரம், அந்தஸ்து, பணத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவார்களாக இருப்பார்கள். இவர்கள் அவர்களின் லட்சியத்தை அடைவதற்காக எந்த லெவலுக்கும் இறங்கி பணியாற்றுவார்கள். இவர்கள் எப்போதும் அடுத்தவரை சார்ந்து வாழ விரும்பவே மாட்டார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப சிறந்து செயல்படக்கூடியவர்கள். அது குடும்பமோ, நட்போ, உத்தியோகமோ, தொழிலோ எதிலும். அதுமட்டுமல்லாமல், இந்த ராசி பெண்கள் தன்னை சுற்றி இருப்பவர்களையும் உயர வேண்டும் என்ற குணம் படைத்தவர்கள். தனக்கு கிடைக்கவில்லை என்றாலும் பிறருக்கு கிடைக்க வேண்டும் என்று எண்ணுபவர். இதனாலையே இவரை பலருக்கும் பிடிக்கும்.
செவ்வாய் பகவானை ராசி நாதனாக கொண்ட மேஷ ராசியை சேர்ந்த பெண்கள் வெற்றிகரமான தலைவர்களாக இருப்பதற்கு வேண்டிய அனைத்து திறமைகளையும் கொண்டிருப்பார்களாம். இவர்கள் வெற்றியை அடைய வேண்டும் என்பதற்காக எதிலும் ஒருபோதும் தயக்கம் கொள்வதில்லை. எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் அதை மனஉறுதியோடு எதிர்கொண்டு தங்களின் பணியை திறம்பட செய்து காட்டுவார்களாம். அதுமட்டுமல்லாமல், மற்ற பெண்களுக்கும் ஒரு முன்னோடியாக இருப்பார்களாம்.
சூரிய பகவானை ராசியதிபதியாக கொண்ட சிம்ம ராசியை சேர்ந்த பெண்கள் தலைமைத்துவ குணம் படைத்தவர்கள். இதனால் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் அதை எப்படி திறம்பட தீர்க்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். அதுமட்டுமல்லாமல், இந்த சிம்ம ராசி பெண்கள் அவர்களை சுற்றியுள்ளவர்களை ஈர்ப்பதற்காக ஆசைப்படுவார்களாம். அதனால், மற்றவர்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்கவே மாட்டார்களாம். எதிலும் தாம் தான் ராஜாவாக இருக்க வேண்டும் எண்ணுவார்கள். மேலும், சமூக சேவகர்களாகவும் இருப்பார்கள். குறிப்பாக இந்த ராசிப் பெண்களால் எவ்வளவு பெரிய கம்பெனியையும் வெற்றிகரமாக நடத்தும் திறன் இருக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…