தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் இன்னும் 10 நாளில் வெளியாகும் என தெரிய வந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் சூசகமாக கூறிய நிலையில், திரைப்படம் சார்ந்த நபரிடம் விசாரித்தோம். அவரிடமிருந்து 3 முக்கியமான அப்டேட்கள் கிடைத்துள்ளன. இவை நிச்சயம் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்துக்குள்ளாக்கும் என்பது மட்டும் உறுதி.
வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், இன்னும் பத்து நாட்களில் விஜய்யின் அடுத்த பட அப்டேட் தெரியவரும் என கூறப்படுகிறது. இத்துடன் சேர்த்து மூன்று முக்கியமான அப்டேட்களும் அடுத்தடுத்து வெளியாகும் என்பது தெரியவந்துள்ளது.
வாரிசு படத்தில் குடும்பம், பாசம், அன்பு பற்றிய கதையைத் தேர்ந்தெடுத்த விஜய், அது மக்களிடம் எப்படி போய் சேர்ந்திருக்கிறது என்பது குறித்து படக்குழுவுடன் பேசினாராம். வெளிநாட்டிலிருந்து திரும்பி தளபதி 67 பட ஷூட்டிங்கில் இருக்கும் அவருக்கு ஒவ்வொரு மணி நேரமும் அப்டேட் சென்று கொண்டிருக்கிறதாம்.
இன்று மாலை முதல் வாரிசு படத்தின் நிலவரம் அதிகரிக்கும் எனவும் படம் குறித்த நல்ல விதமான விமர்சனங்களை அடுத்தடுத்து பரப்ப திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என இந்த 5 நாட்களில் நல்ல வசூலை அள்ளலாம் எனவும் அடுத்த வாரம் சனி, ஞாயிறுகளிலும் படம் நன்றாக போகும் எனவும் தயாரிப்பு தரப்புக்கு ரிப்போர்ட் சென்றுள்ளதாம். இதனை விஜய் கேட்டு தெரிந்துகொண்டதுடன், தனது அடுத்த பட அறிவிப்பை வாரிசு படம் தியேட்டரில் ஓடும் வரை அறிவிக்க வேண்டாம் என கூறியுள்ளாராம்.
வாரிசு படம் திரையில் வெற்றிகரமாக சென்றுகொண்டிருப்பதால், அடுத்த படம் குறித்த அப்டேட் பொங்கலுக்கு வெளியாகாது. அது இன்னும் 10 நாட்கள் கழித்து ஜனவரி 22ம் தேதி ஞாயிறன்று வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதனைத் தொடர்ந்து ஜனவரி 26ம் தேதியும் ஒரு அப்டேட் காத்திருக்கிறதாம்.
முதல் அப்டேட்டாக வெளியாகவிருப்பது டைட்டில் என்கிறார்கள். வழக்கமாகவே விஜய் பட டைட்டில்கள் படம் துவங்கும்போது வெளியாகாது. ஆனால் இந்த முறை நிச்சயம் பட டைட்டிலுடன் வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளனராம் படக்குழுவினர்.
கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்புதான் அதற்கு காரணம் என்கிறார்கள்.
வாரம் ஒரு அப்டேட். ரசிகர்கள் தங்களது நாயகர்களின் பட அப்டேட்களைத் தெரிந்து கொள்ள அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள். அதனை டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள். அதனை தெரிந்துகொள்ள பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் இம்முறை வாரம் ஒரு அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது. சின்ன சின்ன தகவல்களை வெளியிட விஜய் சம்மதித்திருக்கிறாராம். அதனை படக்குழுவில் இடம்பெற்றுள்ள யாரவது ஒருவர் வெளியில் சொல்வார் ஆனால் அவசரப்பட்டு முக்கியமான விசயங்களை வெளியில் சொல்லக்கூடாது, ஷூட்டிங்கில் முக்கியமான நடிகர்களைத் தவிர யாரும் மொபைல் ஃபோன் பயன்படுத்தக்கூடாது என கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
பாடல்கள் இருக்கிறதா? என்றுதான் பலரும் சந்தேகிக்கிறார்கள். விஜய் படத்தின் வியாபாரத்துக்கு பாடல்கள் நிச்சயம் உதவும் என்பதால் இந்த படத்தில் பாடல்கள் இருக்கிறது ஆனால் அவை படத்தில் பெரிய அளவில் பயன்படுத்தப்படாது என்றே கூறப்படுகிறது. இம்முறை முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் 2 பாடல்களை மட்டுமே படத்தில் வைக்கவிருக்கிறார்களாம். கூடவே பல இசைக் கோர்வைகளும் இருக்கப்போகிறதாம். அனிருத் இசையில் தெறிக்கப்போகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…