இவ்வுலகில் ஒவ்வொரு சமயத்தினருக்கும் ஒவ்வொரு பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களுக்கு பொங்கல், தீபாவளி, ஆடிபெருக்கு போன்று கிறித்துவர்களுக்கும் கிறிஸ்துமஸ், புனித வெள்ளி போன்ற பண்டிகைகளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில், இயேசுவின் துன்பங்களை நினைவுகூறும் நாளாக, புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவை மரணத்தையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா இது.
பொதுவாக, ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு காரணம் இருக்கும். கிறிஸ்துவர்களின் வழிபாட்டு ஆண்டில் முக்கியமான நாளான 'புனிதவெள்ளி' இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்த ஈஸ்டர் ஞாயிறுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
அடுத்தவரின் நலனுக்காக
நாம் செய்யும் தியாகம்
ஒருபோதும் வீண்போகாது.
கர்த்தர்மேல் உன் பாரத்தை
வைத்துவிடு, அவர் உன்னை
ஆதரிப்பார்.
கிறிஸ்துவின் அன்பு உள்ளத்தில்
நிலைத்துவிட்டால் பாவத்தின்
வல்லமை உன்னிடம் தோற்றுவிடும்.
உன்னையும் நேசிக்க உலகில் ஒருவருண்டு,
உன்னையும் அறிவார் உன் கவலையும்
அறிவார் இந்த நிமிடமே.
நீ எதிர்பார்த்த வாசல்கலை
மனிதர்கள் அடைக்கும் போது,
உனக்கு எதிர்பாரா வாசல்களை
கர்த்தர் திறந்து கொடுப்பார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…