தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மழை தொடர்பான அறிக்கையில், தமிழகத்தின் மேல் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று செப்டம்பர் 18, 2022 முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : பகீர்.. சக மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த மாணவி?
மேலும் செப்டம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி, கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், அவற்றை ஒட்டியுள்ள மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது.
இதுமட்டுமின்றி, வட தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : கட்டுனவ நா இருக்க கண்டவளோட போறியா.. கம்பத்தில் கட்டி வைத்து செருப்பால் அடித்த மனைவி
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க :
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…