பொடுகு பிரச்சனை என்பது ஆண், பெண் என இருபலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. இந்த பிரச்சனையைச் சரி செய்ய வேண்டும் எனப் பலவிதமான சிகிச்சைகள் மற்றும் பல முயற்சிகள் மற்றும் முறைகளைப் பின்பற்றியும் அது சரியாகவில்லை. பலரும் பொடுகுகளை மறைக்க வேண்டும் என நினைத்தாலும் அது முடியாத காரியம். மூன்று நாட்களில் இந்த பொடுகு பிரச்சனையை முழுவதுமாக நீக்கி எப்பொழுது திரும்ப வராது, அப்படி ஒரு ஹேர் மாஸ்க் கிடைத்தால் எப்படி இருக்கும். இந்த பதிவில் தலையில் ஏற்படும் பொடுகு பிரச்சனையை எப்படிச் சரிசெய்வது என பார்க்கலாம்.
✤ இந்த பொடுகு பிரச்சனை என்பது எளிதில் தீர்க்க முடியாது. ஆனால் ஆரம்பக்கட்டம் அல்லது சிறிதளவு உள்ளது என்றாலும் எளிதில் சரிசெய்யலாம். மிகவும் அதிகமாக இருந்தால் இந்த முறையை விடாமல் வெகு நாட்கள் பயன்படுத்தினால் மட்டும் சரியாகும்.
✤ மருதாணி இலை – 2 கட்டு
✤ எலுமிச்சை பழம் – 1
✤ தயிர் – 2 ஸ்பூன்
✤ முதலில் எலுமிச்சை பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி அதை நன்றாகப் பிழிந்து கொள்ள வேண்டும். அந்த எலுமிச்சை சாற்றை இரண்டு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
✤ அத்துடன் சுத்தமான தயிர் இரண்டு ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் தண்ணீர் சேர்க்காமல் மருதாணி தலையை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
✤ அரைத்த மருதாணி பொடியை நான்கு ஸ்பூன் அளவிற்குச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக பேஸ்ட் போல் கலக்கிக் கொள்ள வேண்டும்.
✤ இந்த பேக் முதலில் தலையில் அப்ளை செய்து ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.அதற்குப் பின், அப்படியே 15 முதல் 30 நிமிடங்கள் ஊற விடவேண்டும்.
✤ அதற்குப் பின், அமிலம் மற்றும் ரசாயனம் அதிகம் சேர்க்காத ஷாம்பு அல்லது சீயக்காய் மற்றும் அரப்பு போன்றவை கூட பயன்படுத்தலாம். இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பயன்படுத்தினால் விரைவில் பொடுகுகள் முழுவதுமாக போகும் எந்த விதமான பிரச்சனைகளும் இருக்காது.
✤ இந்த முறை குளிர்ந்த நீரில் மட்டும் பயன்படுத்தி குளிக்கலாம். வெந்நீர் பயன்படுத்தாமல், வெதுவெதுப்பான நீர் கூட பயன்படுத்தலாம்.
எலுமிச்சை பழம்
✤ எலுமிச்சை பழத்தில் சிட்ரஸ் அமிலம் உள்ளதால் அது கிருமிநாசினியான பண்புகள் கொண்டது அது தலையில் நோய்த் தொற்றுகள் இருந்தால் குணமாக்கும். பொடுகு பிரச்சனையைச் சரிசெய்வதற்கு உதவியாக இருக்கும். தலையில் பித்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் சரிசெய்யும் அப்படி இல்லை என்றால் வராமல் தடுக்கும்.
✤ தயிர் முகத்திற்குப் பயன்படுத்தினால் முகம் பார்ப்பதற்கு அழகாகவும் மற்றும் பளப்பளப்பாகவும், முகத்தில் உள்ள கொப்பளங்கள் போன்றவை குணமாக்கும். தலையில் உள்ள முடிகளில் பொலிவு இல்லாமல் மற்றும் முடி அடர்த்தி குறைவாக இருந்தாலும் இது குணமாக்கித் தரும். தலைமுடி மிகவும் கருமையாகவும் மற்றும் பெலிவுடனும் வைத்து கொள்ளும்.
✤ மருதாணி என்பது ஒரு இயற்கையான உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு மருத்துவம் குணம் கொண்டது. இதை தலைக்குப் பயன்படுத்தினால் தலையில் உள்ள சூட்டை முழுவதுமாக நீக்கி தரும் மற்றும் குளிர்ச்சியாக வைத்து இருக்கும். இந்த இலையில் பலவகையான நற்பண்புகள் உள்ளது. இந்த இலை கைகளுக்கு அரைத்து வைத்தால் உடலில் உள்ள பித்தம் போன்ற பல பிரச்சனைகளைக் குணப்படுத்தும் ஒரு மருந்து.
✤ இந்த மூன்றைச் சேர்த்தால் அது ஒரு ஆரோக்கியமான ஹேர் பேக் இதைத் தயார் செய்து பயன்படுத்தினால் பொடுகு மற்றும் தலையில் முடி உதிர்வு மற்றும் அடர்த்தி குறைவு என அனைத்து பிரச்சனைகளை இது சரிசெய்து தரும்.
✤ அத்துடன் இதைப் பயன்படுத்தும் போது முடிகள் பார்ப்பதற்கு அழகாகவும் மற்றும் பொலிவுடனும் இருக்கும். முடி அடர்த்தி அதிகமாகவும் மற்றும் நீளமான கருமையான கூந்தல் கிடைக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…