தலைவலியோ, டென்ஷனோ ஏற்பட்டால் உடனே நமது நாக்கு தேடுவது ஒரு கப் சூடான டீயை தான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி ரசித்து ருசித்து குடிக்கும் ஒரு பானம் என்றால் டீ மட்டுமே. டயர்டாக இருக்கும் போது ஒரு கப் சூடான டீயை குடித்த சில நிமிடங்களில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் பாருங்க. ஆஹா. சொல்ல வார்த்தையே இல்லை. இந்த டீக்காக நம்மில் பலரும் அடிமையாகி இருப்பார்கள். ஏனென்றால், அந்த அளவிற்கு அவற்றின் சுவை நம்மை கட்டிப்போட்டு வைத்துவிடுகிறது. ஆனால், அத்தகைய டீ குறித்து அடிக்கடி ஏதேனும் ஒரு ஆய்வு முடிவு வெளிவந்து டீ பிரியர்களிடையே பீதியை கிளப்பும். அப்படி சமீபத்தில் ஒரு ஆய்வு முடிவு வெளியாகி டீ பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தித்திப்பான சாக்லேட் மில்க் ஷேக்.. வெறும் நாலே பொருள்...
ஆய்வு
அமெரிக்காவில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் அனைத்து தரப்பு மக்களின் விருப்ப பானமான தேநீர் பற்றிய நன்மை, தீமைகளை ஆராய்ச்சி நடத்தினர். 2006-2010 ஆம் ஆண்டு வரை, பிரிட்டனின் பயோபேங்கில் சேமித்து வைக்கப்பட்ட மனிதர்களின் தரவுகளை பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 40 வயது முதல் 60 வயதிற்குட்பட்ட ஆண்கள், பெண்கள் உட்பட 5,00,000 மேற்பட்டவர்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 கப் டீ அருந்தும் நபர்களின் வாழ்நாளானது, தேநீர் அருந்தாத நபர்களின் வாழ்நாளை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்பட்டதில் 80% பேர் பிளாக் டீ குடிப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெறும் வயிற்றில் லெமன் ஜூஸ் குடிச்சா இத்தனை நன்மைகளா..?
தேநீரின் நன்மை
ஆனால் உண்மையில் ஆய்வு முடிவுகளின் படியும், அறிவியல் ரீதியான கூற்றின்படியும், தேநீர் குடித்தால் அதிக நாட்கள் உயிர் வாழலாம் என்று எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை. தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளின் மூலம் ஒருவர் தனது 30-40 வயதில் உண்டாகும் இரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றவற்றை தடுக்கலாமே தவிர, ஒருவர் தேநீர் குடிப்பதால் மட்மே நீண்ட காலம் உயிர் வாழலாம் என்பது குறித்து இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
பொதுவாக, தேநீர் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடக்கூடியது. நமக்கு ஏற்படும் காய்ச்சல், சளி போன்ற நோய்களிலிருந்து மீண்டு வர வேண்டுமென்றால், நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி கண்டிப்பாக தேவையான ஒன்று.
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஜூஸ்கள்…
எந்த டீ நல்லது?
தேநீர் இன்று பல வகையான சுவைகளில் கிடைக்கிறது. ஆனால், தேநீரில் ஆரோக்கியமானது வொயிட் டீ (White Tea) தான். இந்த டீயை அதிகமாகக் குடித்தாலும் எந்த தீங்கும் ஏற்படாது. ஏனென்றால் இந்த டீ 'கேமிலியா சினென்சிஸ்' என்ற தேயிலை தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது சீனாவில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது. இதில் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்ஸ் மிகவும் அதிகமாக இருப்பதால் புற்றுநோய்க்கு எதிரான ஆற்றலை கொண்டிருக்கும். அதுமட்டுமல்லாமல், பற்களை வலுப்படுத்த கூடிய ஃப்ளூரைடு மற்றுன் டானின்கள் அதிகமாக உள்ளது.
பழங்கள் அல்லது சில மசாலக்களை கொண்டு தயாரிக்கப்படும் மூலிகைத் தேநீர் (Herbal Tea), காஃபின் இல்லாதது. இதை திஸ்னேஸ் என்றும் அழைப்பார்கள். இந்த டீ -யும் மிகவும் நல்லது. இதேபோல், தேநீர் பூவில் இருந்து தயாரிக்கப்படும் கெமோமில் என்ற டீ பெண்களின் மாதவிடாய்க்காலங்களில் ஏற்படும் வலியை குறைப்பதற்கும், மனஅழுத்தம் இன்றி ஒய்வு எடுக்கவும் உதவுகிறது. பெரும்பாலும், இதை தூங்குவதற்கு முன்பாக அருந்துவார்கள்.
அடுத்ததாக செம்பருத்தி டீ. இதை குடிப்பதால் நமது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் குறைவது மட்டுமல்லாமல், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் உதவுகிறது. இதேபோல் ரூய்போஸ் என்ற தேநீரும் மிகவும் நல்லது. மூட்டுவலி, செரிமானம் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்தது.
இதய நோய் வரமால் இருக்க இந்த தேநீர் குடிங்க... உடல் எடையும் குறையும்..
கிரீன் டீ. இதை பற்றி சொல்லவே தேவையில்லை. ஏனென்றால், இதன் நன்மைகளை பலரும் அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள். மேலேக்கூறிய தேநீர் வகைகள் கூட கிடைப்பது சிரமம். ஆனால் கிரீன் டீ விளையும் மலிவு, உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை கொடுக்கிறது. இருதய நோய் வரக்கூடாது என்று ஆசைப்படுபவர்கள் இந்த டீயை தொடர்ந்து குடித்து வாருங்கள்.
கருப்பு நிறத்தில் இருக்கும் ஓலாங் டீ, இதில் காஃபின் அதிகளவில் இருக்கும். ஒருவர் காஃபின் அதிகமாக எடுக்க எடுக்க இதய எரிச்சல், செரிமானக் கோளாறுகள், நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே, முடிந்த அளவு காஃபின் அதிகம் இருக்கும் பிளாக் டீயை தவிர்ப்பது நல்லது.
தினமும் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பதால் இத்தனை நன்மைகளா...?
நீங்கள் நினைப்பது கிடையாது
நீங்கள் மனதில் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு புரிகிறது. நான் தினமும் 3 ரோசஸ், சக்ரா கோல்டு மற்றும் பல பிராண்டுகளில் கிடைக்கும் டீ தூளை வாங்கி பாலில் போட்டு குடிக்கிறேன். இதைப்பற்றி எதுவுமே சொல்லவில்லையே என்று தானே யோசிக்கிறீர்கள். உண்மையில் டீ குடிப்பது என்பது வெறுமன கொதிக்கும் தண்ணீர் தேநீர் பாக்கெட்டுகளை போட்டு குடிப்பதே நல்லது. நாம் அன்றாடம் குடிக்கும் டீ தூள்களில் சில இராசயனங்கள் கலந்திருப்பார்கள். எனவே, முடிந்த வரை கருப்பு நிறத்தில் இருக்கும் டீ தூள்களை சேர்த்து தேநீர் குடிப்பதையும் தவிர்ப்பது நல்லது.
பாக்கெட் பாலில் டீ போட்டு குடிப்பது நல்லதா?
இந்தகாலத்தில் பெரும்பாலும் பாக்கெட் பால் தான் அதிகம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், உண்மையில் பசும்பாலை விட பாக்கெட் பால் பலமுறை சுத்திகரிக்கப்பட்டு, அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு சுத்தமாக நமக்கு கிடைக்கிறது. இருப்பினும், பசும்பாலில் அந்த பாக்டீரியாக்கள், கிருமிகள் அப்படியே தான் இருக்கும். அப்படி பார்த்தால் பாக்கெட் பால் நல்லது.
காலையில் எழுந்தவுடன் மனதை மயக்கும் டீ, காபி செய்யனுமா…
ஆனால், பாலின் முக்கிய சத்தாக இருப்பது கால்சியம். பாக்கெட் பால் பலமுரை சுத்திகரிப்ப்படுவதால் அந்த சத்துக்கள் மொத்தமும் நீங்கிவிடும். பசும்பாலில் அந்த சத்துக்கள் அனைத்தும் அப்படியே நமக்கு கிடைக்கிறது. எனவே, பசும்பாலை வாங்கிக் குடிப்பதே நல்லது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…