காலை எழுந்தவுடன் நம்மில் பலருக்கும் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். ஏனென்றால், இந்த டீ நமது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவி செய்கிறது. அதுமட்டுமல்லாமல் நம்மில் பலரும் டென்ஷன், தலைவலி ஏற்படும் நேரத்தில் முதலில் தேடுவது டீயை தான். ஆனால், நாம் எப்போதும் குடிக்கும் டீ நம் உடலுக்கு நன்மையை தான் கொடுக்கிறது என்று சொல்ல முடியாது அல்லவா. அதற்கு பதிலாக மூலிகை டீயை அருந்தலாமே. இது தலைவலியை போக்குவதோடு மனஅழுத்தை போக்கி டென்ஷனையும் குறைக்கிறது. இந்த டீயை தயார் செய்ய நீங்க அதிக நேரம்கூட செலவுவிட தேவையில்லை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சட்டென்று தயார் செய்துவிடலாம். சரி, அப்படி என்ன டீ அது? வாங்க பார்க்கலாம்.
வீட்டிலேயே இருக்கும் ஆயுர்வேத மூலிகைகள்... ஜலதோஷம், காய்ச்சல் எல்லாம் பறந்து போய்டும்..
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 1 இன்ச் அளவு
தண்ணீர் - 2 கப்
துளசி இலை - சிறிதளவு
பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 டீஸ்பூன்
புதினா இலை - 4
தேன் - தேவையான அளவு
கெமோமில் தேயிலை (Chamomile) பவுடர் - 1/2 டீஸ்பூன்
குறிப்பு: கெமோமில் தேயிலை பவுடர் என்பது உலர்ந்த கெமோமில் மலர்களால் செய்யப்படுகிறது. டிபார்ட்மென்ட் ஸ்டோரில் கிடைக்கும். கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.
கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஜூஸ்கள்…
செய்முறை:
முதலில் அடுப்பை பற்றவைத்து ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை ஊற்றி அதில் இஞ்சியை நசுக்கி போட்டு கொதிக்க விடுங்கள். அதோடு, கொஞ்சமாக துளசி இலைகளையும் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு, அடுப்பை அணைத்துவிடுங்கள்.
பின்னர் அதை வடிகட்டி, அதோடு பெருஞ்சீரக, புதினா இலைகள், கெமோமில் சேர்த்து நன்றாக கலந்துவிடுங்கள். அதன்பின், சுவைக்காக தேவையான அளவு தேன் சேர்த்து கலக்கி சூடாக பருகுங்கள். அவ்வளவு தான் உங்க தலைவலியை போக்கும் சூப்பரான டீ ரெடி.
பெண்களே உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தா அலட்சியம் காட்ட வேண்டாம்...
இந்த டீயின் நன்மைகள்:
இந்த டீயில் நாம் சேர்த்துள்ள கெமோமில் மற்றும் இஞ்சி இரண்டும் நரம்பு மண்டலத்தை தளர்த்தி, வலி மற்றும் மனஅழுத்தத்தில் இருந்துவிடுபட உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இதில் சேர்க்கப்பட்டுள்ள துளசி இலைகள் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதேபோல், பெருஞ்சீரகம் செரிமானம் மற்றும் உப்பசத்தால் ஏற்படும் தலைவலிக்கு உடனடியாக நிவாரணம் அளிக்கிறது. இனிமேல், தலைவலி ஏற்பட்டால் உடனே நார்மல் டீயை தவிர்த்துவிட்டு இப்படி டீ போட்டு குடிங்க. இது உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கிறது.
எல்லாத்துக்கும் மாத்திரையை தேட தேவையில்ல.. உங்க வீட்டிலேயே இருக்கு இயற்கை வலி நிவாரணிகள்..
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…