தினமும் காலையில் ஒரு ஈஸியான மற்றும் சுவையான ஒரு ரெசிபி வரிசையில், இன்றைக்கு, எந்த ரெசிபி. தினமும் புதியதாக ஒரு ரெசிபி செய்ய வேண்டும் என நினைத்தால் இரவு மீதமான இட்லியை வீணாக்காமல் அந்த இட்லியை வைத்து ஒரு ரெசிபி. இதை மாலையில் ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து சாப்பிடலாம். இந்த பதிவில் இரவில் மீதமான இட்லியை வைத்து ஈஸியான ஒரு ரெசிபி செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
✤ இட்லி – 1கப்
✤ சீரகம் – 1ஸ்பூன்
✤ பச்சைமிளகாய் – 4
✤ தக்காளி – 2
✤ மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
✤ மல்லி தூள் – 2 ஸ்பூன்
✤ சோயா சாஸ் – 2ஸ்பூன்
✤ உப்பு – சிறிதளவு
✤ எண்ணெய் – சிறிதளவு
✤ முதலில் நான்கு வெங்காயம் எடுத்துத் தோல் உரித்துக் கழுவி நன்றாக பொடிப் பொடியாக நறுக்க வேண்டும். பச்சைமிளகாய் எடுத்து நன்றாகக் கழுவி பொடிப் பொடியாக நறுக்க வேண்டும்.
✤ இரண்டு தக்காளி எடுத்து நன்றாக கழுவி அதை பொடிப் பொடியாக நறுக்க வேண்டும்.
✤ அதற்குப் பின், மீதமான இட்லியை எடுத்து பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடான பின், அதில் பொடியாக நறுக்கிய இட்லியைச் சேர்க்கவும்.
✤ அது நன்றாகப் பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதற்குப் பின், அடுப்பை அணைத்து அந்த இட்லியை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
✤ மற்றொரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடான பின், அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
✤ வெங்காயம் பொன்னிறமாக வதக்க வேண்டும். அதன் பின், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதற்குப் பின் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
✤ அத்துடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு சோயா சாஸ் மற்றும் இரண்டு ஸ்பூன் அளவிற்கு மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
✤ அதில் வறுத்த இட்லியைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வறுக்க வேண்டும். அப்படி வறுத்த பிறகு, அடுப்பில் இருந்து இறக்கினால் காலை உணவு தயார். அனைவருக்கும் பகிர்ந்து சாப்பிடலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…