தினமும் மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி வரிசையில், இன்றைக்கு என்ன ரெசிபி. இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. இந்த ஸ்நாக்ஸ் ரெசிபி சாப்பிடுவதற்கு சமோசா போல் இருக்கும். இந்த ஸ்நாக்ஸ் ரெசிபி எளிதில் செய்து சாப்பிட முடியும். இந்த பதிவில் இன்றைய மாலையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி ரவை உருளைகிழங்கு செய்வது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
✤ ரவை – 2கப்
✤ அரிசி மாவு – 2 கப்
✤ வெங்காயம் – 4
✤ பச்சை மிளகாய் – 4
✤ சீரகம் – 1ஸ்பூன்
✤ மிளகாய்த் தூள் –1/4 ஸ்பூன்
✤ சாட் மசாலா – 1/4ஸ்பூன்
✤ கொத்தமல்லி – சிறிதளவு
✤ உப்பு – ஒரு சிட்டிகை
✤ எண்ணெய் – தேவையான அளவு
✤ உருளைக்கிழங்கு – 10
✤ தண்ணீர் – தேவையான அளவு
✤ முதலில் உருளைக்கிழங்கை எடுத்து நன்றாகக் கழுவ வேண்டும். அதற்குப் பின், ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு எடுத்து வேக வைக்க வேண்டும்.
✤ வெங்காயத்தை எடுத்துத் தோல் நீக்கி நன்றாகக் கழுவிக் கொள்ளவும். அதற்குப் பின், நறுக்கிக் கொள்ளவும். கொத்தமல்லி தலையை நன்றாகக் கழுவி நறுக்கிக் கொள்ளவும்.
✤ பச்சைமிளகாய் எடுத்து நன்றாகக் கழுவி நறுக்கிக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்க்க வேண்டும்.
✤ அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்குச் சீரகம் சேர்த்து நன்றாக வதக்கவும். சீரகம் வதக்கிய பிறகு, அதில் இரண்டு கப் அளவிற்கு ரவை சேர்க்க வேண்டும்.
✤ அது நன்றாகப் பொன்னிறமாக வதக்க வேண்டும். அதற்குப் பின், அதில் ஒரு கப் அளவிற்குத் தண்ணீர் சேர்த்து நன்றாக ரவை வேக விடவும்.
✤ அதில் சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும். ரவை வெந்த உடன் தண்ணீர் முழுவதுமாக வடிந்த பின், அதை மற்றொரு பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும்.
✤ வெந்த உருளைக்கிழங்கை எடுத்துத் தோல் உரித்து நன்றாக மசிக்க வேண்டும். அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கலக்கவும். அதில் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
✤ அதில் சிறிதளவு உப்பு மற்றும் கால் கப் அளவிற்கு மிளகாய்த் தூள்,சாட் மசாலா சேர்த்து நன்றாகக் கலந்து பிசைந்து கொள்ளவும்.
✤ இறக்கிய ரவையில், அரிசி மாவைச் சேர்த்து நன்றாகப் பிசையவும். அதைச் சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
✤ அதை ஒரு 10 முதல் 20 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். அதற்குப் பின், அந்த மாவை எடுத்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
✤ அதை சாப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து கொள்ளவும்.
✤ அதை ஒரு கட்ட வடிவத்தில் உள்ள கட்டர் வைத்துக் கட் செய்து கொள்ள வேண்டும். சிறிய சிறிய கட்ட வடிவில் கட் செய்து வைத்து கொள்ளவும்.
✤ அதில் ஒரு பகுதியை எடுத்து, அதில் உருளைக்கிழங்கு மசாலா கலவையை வைத்து அதன் மேல் ஒரு கட் செய்த மற்றொரு பகுதியை வைத்து மூடிக் கொள்ள வேண்டும்.
✤ இது போன்று மீதமுள்ள மாவில் செய்து கொள்ள வேண்டும்.
✤ ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாகச் சூடாக்க வேண்டும். அதில் செய்த ரவை கலவையைச் சேர்த்து நன்றாக வேக விட வேண்டும். நன்றாக வெந்த உடன் எடுத்தால் சூடான மற்றும் சுவையான ரவை உருளைகிழங்கு ரெசிபி தயார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…