பாதம் என்பது மிகவும் அதிகமாக உபயோகப்படும் ஒரு பகுதி. நாம் பல இடங்களுக்கு செல்வதாலும் மற்றும் காலணிகளை வெகுநேரம் அணிந்திருந்தால் அந்த இடத்தில் அழுக்குகள் அதிகமாகச் சேரும். பாதத்தில் கருமையாகவும், அழுக்காகவும் இருப்பதைப் பார்த்தால் கூட அதை நாம் தண்ணீர் ஊற்றிக் கழுவுவது வழக்கம். ஆனால் அப்படிச்செய்வதால் அழுக்குகள் எளிதில் சுத்தமாகாது. இந்த பதிவில் பாதங்களில் இருக்கும் கருமை மற்றும் அழுக்குகள் முழுவதுமாக நீக்குவதற்கு வீட்டில் இருக்கும் பொருள்களை பயன்படுத்தி எப்படி சுத்தம் செய்வது என்பதைப் பார்க்கலாம்.
✤ வெள்ளரிக்காய் மிகவும் சத்து நிறைந்த ஒரு பழவகை.அதைப் பாதத்தில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் கருமை, அழுக்குகள் சுத்தம் செய்வதற்கு மிகவும் உதவும்.
✤ ஒரு வெள்ளரிக்காய் எடுத்து அதை இரண்டாக வெட்டி அதில் இருக்கும் சாறு நன்றாகப் பிழிந்து கொள்ளவும்.
✤ அதில் வரும் சாற்றை ஒரு காட்டன் துணியில் எடுத்து அதைப் பாதம் முழுவதும் தேய்த்துக் கொள்ளவும்.
✤ விரும்பினால் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொண்டு அதைப் பாதத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யவும்.
✤ அதை 10 நிமிடங்கள் ஊற வைத்து அதன்பின் பாதங்களை கழுவினால் பாதங்களில் உள்ள அழுக்குகள் மற்றும் கருமை அனைத்து நீங்கி மென்மையான பாதம் ஆக மாறும். இதை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
✤ உருளைக்கிழங்கு கருமை நீங்குவதற்கு மிகவும் சிறந்தவை. அதை பொதுவாக முகத்தில் உள்ள கருமை மற்றும் கண்களில் இருக்கும் சுருக்கங்கள் மற்றும் கருவளையங்களைச் சுத்தம் செய்வதற்கும் பயன்படும்.
✤ ஒரு பச்சை உருளைக்கிழங்கு எடுத்து அதை நறுக்கிக் கொண்டு,மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.
✤ அதில் உள்ள சாறு மற்றும் வடிகட்டியில் வடித்து எடுத்து பாதத்தில் தடவவும்.
✤ அதை 12முதல் 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும். அதன் பின், பாதத்தை கழுவிக் கொள்ளவும்.
✤ இந்த முறை வாரத்திற்கு ஒரு முறை செய்வது நல்லது.இதை செய்வதால் பாதம் மிகவும் மென்மையாகவும்,அழகாகவும் இருக்கும்.
✤ எலுமிச்சை பழத்தில் உள்ள அமிலம் ஆனது நோயெதிர்ப்பு சக்தி உள்ளதால் பாதத்தில் உள்ள அழுக்குகள் சுத்தம் செய்வதுடன் பாக்டீரியாஸ் இருந்தாலும் அது சுத்தம் செய்துவிடும்.
✤ ஒரு எலுமிச்சை பழம் எடுத்து அதை இரண்டாக வெட்டி அதை நன்றாகப் பிழிந்து கொள்ளவும்.
✤ அதில் உள்ள விதைகளை எடுத்து விட்டு பாதத்தில் தடவி மசாஜ் செய்யவும். அதைச் சிறிது நேரம் அப்படியே ஊற விடவும்.
✤ அதற்குப் பின், கழுவினால் அழுக்குகள் சுத்தமாகும், அழகாகவும் மற்றும் கருமை முழுவதுமாக மறைந்துவிடும். இதை செய்வதால் அந்த இடத்தில் இறந்த செல்கள் நீக்கும். இதை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தலாம்.
குறிப்பு : பாதத்தில் அரிப்பு மற்றும் தோல் பிரச்சனைகள் இருந்தால் இதை பயன்படுத்த வேண்டாம்.
✤ இந்த முறையில் ஒரு தக்காளி எடுத்து அதில் உள்ள மேல் தோல் நீக்கி நன்றாக பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
✤அதில் 3 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்று கலக்கிக் கொள்ளவும்.
✤அதைப் பாதத்தில் தேய்த்து நன்றாக மசாஜ்செய்யவும். அதை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
✤அதன்பின்,கழுவினால் பாதம் சுத்தமாகவும்,மிகவும் அழகாகவும் இருக்கும்.
✤தக்காளியில் ஆண்டி ஆக்ஸிடங்கள் நிறைந்துள்ளது அதனால் பாதம் மிகவும் பொலிவாக இருக்கும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலத்தால் அது பாதத்தை மென்மையாகவும் அழகாகவும் வைக்கும்.
✤தேன் சருமத்தை மிகவும் மென்மையாகவும் அழகாகவும் வைக்கும் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர் ஆகும். பப்பாளி இயற்கையாகவே என்சமைகள் உள்ளது அதனால் கருமை மற்றும் அழுக்குகள் சுத்தம் செய்யும்.
✤முதலில் ஒரு பப்பாளியில் 6 துண்டுகளை எடுத்துக் கொண்டு அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அத்துடன் 2 டீஸ்பூன் அளவிற்கு தேன் சேர்த்துக் கொள்ளவும்.
✤அதை பேஸ்ட் போன்று நன்றாக மசித்துக் கொள்ளவும். அதைப் பாதத்தில் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்து கொள்ளவும்.
✤அதை 30 நிமிடங்கள் அப்படியே விடவும்.அதன் பின் கழுவினால் பாதம் பார்ப்பதற்கு, மென்மையாகவும், அழகாகவும் இருக்கும். இந்த முறை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…