உடலில் இயல்புக்கு மாறாக உண்டாகும் ஒரு சில மாற்றங்களால் உருவாவதே புற்றுநோய் ஆகும். புற்றுநோயில் நிறைய வகைகள் உண்டு. அந்த வகையில், உடலில் ஏற்படும் மலக்குடல் புற்றுநோய் குறித்த தகவல்களையும், அதை தடுக்கும் முறைகளைக் குறித்தும் இந்தப் பதிவில் காணலாம்.
புற்றுநோய் உள்ள நபர்களுக்கு, உடலில் சில செல்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்திருக்கும் அல்லது வளர்ந்து கொண்டே வரும். குறிப்பிட்ட இடத்தில் உண்டாகும் இந்த மாற்றம், உடலின் பிற பகுதிகளுக்கும் பரவக் கூடியதாக அமையும். புற்றுநோயின் அறிகுறிகள் பொதுவாக மிதமான அளவிலேயே காணப்படுவதால், இது பெரிய அளவிலான தீங்கை ஏற்படுத்தாது என அலட்சியப்படுத்தக் கூடும். இந்த மாற்றத்தில் ஒன்று சளி பிடிப்பது என்றும் கூறலாம்.
ஆசன வாய்ப்பகுதிக்கு சற்று உள்ளே இருக்கும் பகுதியே மலக்குடல் ஆகும். இது பெருங்குடலின் கடைசிப் பகுதியாகத் தான் இருக்கும். இருப்பினும், புற்றுநோய் பெரும்பாலும் பாதிப்பை ஏற்படுத்துவது இந்த மலக்குடலில் தான். எத்தனையோ காரணங்கள் இருப்பினும், உணவு முறையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம் ஆகும். காரம் அதிகம் உள்ள உணவுப் பொருள்கள், அதிக கொழுப்பு சத்து மிகுந்த உணவை எடுத்துக் கொள்வதன் மூலம் மலக்குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது.
புற்றுநோய் கட்டியானது ஒரு செல்லில் இருந்து உருவாகி வளர்ந்து கொண்டே போகும். ஒரு செல்லில் வளர்ந்து கட்டியாகி, பிறகு புண்ணாகி மற்ற இட்னகளுக்குப் பரவும். இதனை அலட்சியப்படுத்தக் கூடாது. மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மலம் கழிக்கும் போது இரத்தம் வருதல், அடிவயிறு வலித்தல், மலச்சிக்கல் உண்டாகுதல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். இதில் முக்கிய காரணமாக இருப்பது மலத்தில் இரத்தம் போவது தான். இதனால், பல பேர் அலட்சியப்படுத்தி விடுவதால், புற்றுநோய் கட்டி வேகமாக வளர்ந்து மலக்குடலை அடைத்து உடலின் மற்ற இடங்களுக்குப் பரவி விடுகிறது.
மலக்குடல் புற்றுநோய் உண்டாவதால், உடலில் பல்வேறு அறிகுறிகள் தோன்றும்.
சோர்வு ஏற்படுதல், ஆசன வாயில் இரத்தம் ஏற்படுதல், கருப்பு அல்லது அடர்ந்த நிறத்தில் இரத்தம் காணப்படுவது, சன்னமாக மலம் கழித்தல், அடிவயிற்றில் அதிகமாக வலி உண்டாவது உள்ளிட்டவை மகக்குடல் நோயினால் ஏற்படும் அறிகுறிகளாகும்.
அது மட்டுமல்லாமல், சளி பிடிப்பதனால் கூட மலக்குடல் புற்றுநோய் உண்டாகலாம் எனக் கூறப்படுகிறது. சளி பிடித்திருப்பதையும் நாம் அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், சிறந்த வகையில் சிகிச்சை எடுத்து கவனிக்க வேண்டும்.
மலக்குடல் புற்றுநோயை முடிந்த அளவிற்கு ஆரம்பகாலத்திலேயே எந்த அலட்சியமும் செய்யாமல், அதற்குத் தகுந்தாற்போல் சிகிச்சை எடுத்துக் கொள்வதும் அவசியமாகிறது. அதன் படி, முதலில் நாம் சாப்பிடும் உணவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதிக நாற்சத்து மிகுந்த உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் உள்ளிட்டவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு குறைவான உணவை எடுத்துக் கொள்வது நல்லது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…