சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திதி அல்லது சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த 3ம் நாள் வரும் திதி 'அட்சய திருதியை' என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்வது, செழிப்பு என்று அர்த்தம். அந்தவகையில், அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அந்த பொருள் பெருகும் என்பது ஐதீகம்.
அதனால்தான் அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை எவ்வளவு விலையாக இருந்தாலும் கிராம் கணக்கிலாவது வாங்குவார்கள். தங்கம் மட்டும் தான் வாங்க வேண்டும் என்பது கிடையாது வீடு, மனை, உப்பு, அரிசி, ஆடை போன்று வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கலாம்.
அன்றைய தினத்தில் எந்த செயலைத் துவங்கினாலும் அது முழுமையாக வெற்றி பெறும். ஒருவேளை தங்கம் வாங்காத, தங்கம் வாங்க முடியாதவர்கள் ஏழைகளுக்கு தானம் செய்யலாம். இவ்வாறு தானம் செய்வதால் நம் சந்ததியினர் நிறைவான வாழ்க்கையை வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. இத்தகைய மங்களகரமான நாளில் அன்பையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்துக் கொள்வோம்.
செல்வத்தை போல மகிழ்ச்சியும்,
சந்தோசமும் பல மடங்கு பெருக
அனைவருக்கும் அட்சய திருதியை
நல்வாழ்த்துக்கள்!
உங்கள் வாழ்க்கை எப்போதும்
ஏராளமான செழிப்பையும் மகிழ்ச்சியை
நிறைந்ததாக இருக்க லட்சுமி தேவியின்
பூரண அருள் கிடைக்கட்டும்..
அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள்!
இந்த புனித நாளில் நீங்க துவங்கும்
சிறிய முயற்சியும் பெரிய வெற்றியை
கொடுக்கட்டும்.. அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள்!
குறைவில்லா செல்வம்,
நிறைந்த மகிழ்ச்சி,
நோயில்லா வாழ்க்கையின் பு
திய தொடக்கமாக இருக்கட்டும்.
அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள்!
இன்றுபோல் வாழ்நாள் முழுவதும்
நித்திய அதிர்ஷ்டமும் செழிப்பும் கிடைக்கட்டும்.
அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள்!
அட்சய திருதியை நாள் உங்களுக்கு
நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தரட்டும்.
அட்சய திருதியை நல்வாழ்த்துக்கள்!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…