சுக்கிரன் ஒளி பொருந்திய கிரகம், களத்திரகாரகன் இல்லற வாழ்வுக்குறியவர். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர் சுக்கிர பகவான். அதனால் தான் சுக்கிரன் என்றால் இன்பம் என்று பலரும் சொல்வார்கள். சுக போகங்களின் அதிபதியான சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார்.
இத்தகைய சிறப்புடைய சுக்கிர பகவான் சராசரியாக 28 நாட்கள், 30 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடைவார். அந்தவகையில், தற்போது சனி ஆளும் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். வருகின்ற பிப்ரவரி 15, 2023 அன்று இரவு 08.12 மணியளவில் கும்பத்திலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். பொதுவாக ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும்போதெல்லாம் அது பல சுப யோகங்களுடன் ராஜயோகத்தையும் உருவாக்கும். அந்தவகையில், மீன ராசியில் நுழையும் சுக்கிரனால் அரிதான 'மாளவ்ய மகாபுருஷ யோகம்' உருவாகிறது.
ஜோதிடத்தில் இந்த மாளவ்ய மகாபுருஷ யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் மற்றும் சந்திரன் 1,4,7 மற்றும் 10 ஆம் வீட்டில் ரிஷபம், துலாம் அல்லது மீனம் ஆகிய இடங்களில் சுக்கிரன் அமைந்திருந்தால் இந்த ராஜயோகம் உருவாகும். அப்படி உருவாகும் இந்த யோகத்தால் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் இந்த 5 ராசிகாரர்கள் நல்ல லாபத்தை பெறப் போகிறார்கள். இப்போது மீன ராசிக்கு செல்லும் சுக்கிரனால எந்த ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கப்போகிறது என்பதை காண்போம்.
மாளவ்ய ராஜயோகத்தால் தனுசு ராசிகாரர்களுக்கு அமோகமான வளர்ச்சி ஏற்படும். மன அழுத்தத்தால் கஷ்டப்பட்டுவந்த காலம் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் உருவாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. குடும்ப பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்தாச்சு என்றே சொல்லலாம்.
சுக்கிரன் உங்க ராசிக்கு 9வது வீட்டில் அமருவதால், பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பிறகு அதிர்ஷ்டம் தான். 9வது வீடு என்பது அதிர்ஷ்டம் மற்றும் வெளிநாடு ஸ்தானம் ஆகும். இதனால், வெளியூர் சம்பந்தமான அனைத்து காரியங்களும் நல்ல முறையில் ஈடேறும். தந்தையுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் விலகி, அன்பு, பாசம் அதிகரிக்கும். இந்த காலக்கட்டம் மாணவர்களுக்கு சாதகமான காலக்கட்டமாகவும் விளங்குகிறது. இதனால், படிப்பில் டல்லாக இருந்த மாணவர்கள் கல்வியில் நன்றாக கவனம் செலுத்தி வெற்றியடைவார்கள்.
சுக்கிரனின் ராசிமாற்றத்தால், மிதுன ராசியினருக்கு அற்புதமாக நன்மையாகவும் இருக்கும். அதாவது, சுக்கிரன் உங்க ராசிக்கு 10 ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால், தொழில் வியாபாரம், பணியிடம், பணவரவு என அனைத்திலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் அலைந்துக் கொண்டிருக்கும் மிதுன ராசியினருக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும் வாய்ப்புகளை பெறுவீர்கள். டல்லாக இருந்த வியாபாரத்தில் திடீர் லாப மழை பெய்யும். கடன் பிரச்சனையில் சற்று விடுதலையாவதற்கு வழி பிறக்கும்.
கன்னி ராசியின் 7 வது வீட்டிற்கு சுக்கிரனின் சஞ்சாரம் அமையப்போகிறது. 7வது வீடு என்பது திருமண வாழ்க்கை மற்றும் ஒற்றுமையின் வீடாகும். இதனால், இந்த காலக்கட்டத்தில் வாழ்க்கைத் துணையிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி, அவர்களின் உதவியால் நல்ல பணவரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு பொற்காலம் தான். சுக்கிரனின் இந்த பெயர்ச்சியால் உருவாகும் மாளவிய ராஜயோகத்தால் கூட்டு வணிகம் செய்பவர்கள் மிகப்பெரிய லாபத்தை பெறுவார்கள்.
சுக்கரனின் இந்த ராசி மாற்றம் கும்ப ராசியினருக்கு அற்புதமாக இருக்கும். ஏனென்றால், உங்க ராசிக்கு 2ஆம் வீட்டிற்கு வருகிறார். இந்த ஸ்தானம் பணத்தின் பிறப்பிடம் என்றே சொல்லலாம். இனி கடன் பிரச்சனையால் வாழ்க்கையில் பல அடிகளை வாங்கிய கும்ப ராசியினருக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகிறது. இந்த காலக்கட்டத்தில் பணவரவு அமோகமாக இருக்கும். தொழிலில் எதிர்பார்த்தைவிட லாபம் இரட்டிப்பாக இருக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு நிச்சயம் வாய்ப்பிருக்கிறது. திருமண யோகமும் உண்டு.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…