செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தொழில்நுட்பம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாக அவ்வப்போது ஏதாவது ஒரு மென்பொருள் வெளியாகி மக்களிடத்தில் பெறும் வரவேற்பை பெற்றிவிடுவது வழக்கம். அந்த வரிசையில் வெளியான ஒரு செயலி தான் 'Midjourney'. இந்த ஆப்பை பயன்படுத்தி வரையவும், எழுதவும் முடியும். குறிப்பாக டிஜிட்டல் ஓவியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும் மாறியுள்ளது.
அந்தவகையில், ஜியோ ஜான் முள்ளூர் என்ற ஓவியர் AI மென்பொருளான Midjourney மற்றும் Photoshop ஐப் பயன்படுத்தி உலகத் தலைவர்களின் படங்களை வரைந்திருக்கிறார். அந்த காலத்து தலைவர்கள் ஸ்மார்ட்ஃபோன் மூலம் செல்ஃபி எடுத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையால் உருவான இந்த வித்தியாசமான செயற்கை நுண்ணறி ஓவியங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் மறைந்த அரசர்களுக்கு உருவம் கொடுத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆள்த்தியுள்ளார்.
Image credits: Jyo John Mulloor
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…