நவராத்திரி தினத்தின் மூன்றாவது நாள் துர்கை சொரூபமாக இந்திராணி தேவியாகும். மாஹேந்தரி, சாம் ராஜ தாயினி என்னும் திருநாமம் கொண்ட இவள் தேவர்களின் அரசர் இந்திரனின் சக்தியைக் கொண்டவள். இந்திரனின் வஜ்ராயுதத்தின் பலத்திற்கு நிகர் இல்லை என்பதுபோல் இவளின் அன்பிற்கு ஈடில்லை. நவராத்திரியின் மூன்றாவது நாளில் (Navratri Pooja 2022) என்ன பிரசாதம் செய்து எந்த திருமந்திரம் உச்சரித்து அம்மாளை ஆராதிப்பது என்பதைக் காணலாம்.
நவராத்திரி மூன்றாவது நாள் (Third Day Of Navratri Puja)
தலையில் கீரிடம் கொண்ட வஜ்ராயுதம் ஏந்திய இந்திராணி தேவியே நவராத்திரியின் மூன்றாவது நாள் வழிபடு இறைவி ஆகும். இந்திரனின் சக்தி கொண்ட இவளே தேவலோகத்தை பரிபாலனம் செய்யும் சக்தி ஆவாள், ஆயிரம் கண்ணுடையவளே விருத்திராசுரனை அழித்த சக்தி ஆகும்.
இன்றைய தினம் செய்யும் பூஜை நம் தொழில் மேம்பட வழி செய்யும். மூன்றாவது நாள் பூஜைக்கு மலர் கோலம் அமைத்து அம்மாளை சம்பங்கி மலரால் அலங்கரித்து கொள்ள வேண்டும். பூஜையின் போது ஆனந்த பைரவி ராகம் வாசித்து பூஜிப்பது அம்மாளுக்கு விருப்பமாகும்.
ஜாதகத்தில் சந்திரன் திசை அல்லது புத்தி நடக்கும் நபர்கள் முக்கியமாக திரிகோணத்தில் சந்திரன் இருப்பவர்கள் அல்லது லக்கினத்தில் சந்திரன் இருப்பவர்கள் இந்த மூன்றாவது நாள் நவராத்திரி பூஜையில் (Navratri Pooja 2022) கலந்து கொள்வது சிறப்பாகும்.
மந்திரம் (Navarathri Third Day Mantra):
ஓம் ஹ்ரீம் இம் வம் இந்திராணியை நம
ஓம் கஜத்வஜாயை வித்மஹே
வஜ்ரஹஸ்தாயை தீமஹி தந்நோ
இந்திராணி ப்ரசோதயாத்
வணங்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் (Navratri Third Day):
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
பிரசாதம் (Third Day Of Navratri Prasadam):
இன்று அம்மனுக்கு வெண்பொங்கல் மற்றும் பாயசம் செய்தல் வேண்டும். பூஜையின் போது அம்மாளுக்கு படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக அளிப்பதன் மூலம் உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.
யார் யார் வணங்க வேண்டும், என்ன பிரசாதம் செய்ய வேண்டும், சொல்ல வேண்டிய மந்திரம்
1st நாள் | 4th நாள் | 7th நாள் |
2nd நாள் | 5th நாள் | 8th நாள் |
3rd நாள் | 6th நாள் | 9th நாள் |
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…