மங்களகரமான சுபகிருது வருடம் கார்த்திகை 29 ஆம் நாள் வியாழக்கிழமை [2022 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி] நாளுக்கான துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிகளுக்கு உண்டான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
ராசிபலன்:
துலாம் - முயற்சி
விருச்சிகம் - உதவி
தனுசு - தைரியம்
மகரம் - கவலை
கும்பம் - அனுகூலம்
மீனம் - அன்பு
நல்ல நேரம்:
காலை: 10.30 - 11.00 வரை
மாலை: -
மேஷம் - கன்னி நாளைய ராசிபலன் [15.12.2022]
நண்பர்களிடம் விளையாட்டான பேச்சை தவிர்த்துக் கொள்வது சிறந்தது. இல்லையென்றால், விளையாட்டு விணையாகிவிடும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். இதன் மூலம் உங்க திறமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்யலாம். எதிர்காலம் தொடர்பான புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த புதிய யுக்திகளை கையாளுவீர்கள். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். மனதில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும் நாள். முயற்சி!
அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்
அதிர்ஷ்ட எண்: 4
கூட்டு தொழிலில் லாபம் மேம்படும். அனுசரனையான வார்த்தைகளின் மூலம் பிறரை கவர்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். தொழில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணியில் சவால்களை ஈஸியாக சமாளிப்பீர்கள். சகஊழியர்களிடம் அனுசரித்து நடந்துக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி சம்பந்தமான விஷயங்களில் பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். நல்ல விஷயங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். உதவி!
அதிர்ஷ்ட நிறம்: நீலநிறம்
அதிர்ஷ்ட எண்: 9
மனதில் புதுவிதமான தெம்பும், தைரியமும் பிறக்கும். நிர்வாகம் சார்ந்த புதிய முடிவுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மற்றவர்களுக்கு உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் கவனமாகப் பழக வேண்டும். துணையுடன் விளையாட்டான பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அனத்தம் உங்களுக்கே. பயணங்களின் போது பணத்தை கையாளுவதில் கவனம் தேவை. கண்கள் சம்பந்தமான பிரச்சனை வாய்ப்புள்ளது. தைரியம்!
அதிர்ஷ்ட நிறம்: வெண் சாம்பல்
அதிர்ஷ்ட எண்: 5
எதிர்பாராத செலவுகள் கவலையை கொடுக்கும். குடும்பத்தில் நெருக்கடியான சூழல் உண்டாகும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்மறை எண்ணங்களையும் தவிர்க்க வேண்டும். பெரியோர்களிடம் அனுசரித்து போவது சிறப்பு. யாரிடம் பேசும் போதும் பேச்சில் பொறுமையும், நிதானமும் வேண்டும். துணையிடம் கோபத்தை குறைத்துக் கொள்ளவும். இல்லையென்றால், வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தனவரவு சுமாராக தான் இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. கவலை!
அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3
கடின முயற்சியால் சிறந்த வளர்ச்சி காணப்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் நாள். கணவன், மனைவி இடையே அன்பும், அரவணைப்பும் அதிகரித்தே காணப்படும். தொழிலில் லாபம் இரட்டிபாகும், இதனால் சேமிப்பை உயர்த்த முடியும். அனுகூலம்!
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்
அதிர்ஷ்ட எண்: 3
சில காரியங்களில் தடைகளை கண்டு அதன்பின் வெற்றி காண்பீர்கள். சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். மனதில் தன்பிக்கை அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகள் தேடி வரும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். அன்பு!
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 6
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…