வியாழன் கிரகம் தான் தேவர்களின் 'குரு' என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குரு பகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அதேபோல், குரு பகவானின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரக்கூடியவை. குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு குறைந்தது 12 மாதங்களாவது (1 வருடம்) எடுத்துக் கொள்வார்.
அந்தவகையில், இந்த ஆண்டு குரு பகவான் ஏப்ரல் 22, 2023 ஆம் தேதி மீனத்தை விட்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்குவதோடு, 12 ராசியிலும் பல மாற்றங்கள் மற்றும் திருப்பங்களை ஏற்படுத்தும். அந்தவகையில், துலாம் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எந்த மாதிரியான பலன்களை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பகவான் உங்க ராசிக்கு 5வது வீட்டிலிருந்து 6வது வீடான ருனரோக சத்திர ஸ்தானத்தில் அமரப்போகிறார். குரு பகவான் ருனரோக சத்திர ஸ்தானத்தில் அமருவது என்பது விருச்சிக ராசியினருக்கு சிறப்பு கிடையாது. ஏற்கனவே அர்த்தாஷ்டம சனி காலம் உங்களுக்கு ஆரம்பித்துக்கும் வேளையில், குரு பகவானும் ராசிக்கு சரியில்லாத இடத்தில் அமரப் போகிறார். குருவும் சனியும் சரியில்லாத இடத்தில் இருக்கிறார்கள்; எனவே ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 6வது வீட்டில் அமரும் குரு பகவானால் விருச்சிக ராசியினர் உடல் ஆரோக்கிய ரீதியான பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நிம்மதியற்ற சூழ்நிலையில் இருப்பீர்கள். எதிர்காலம் சார்ந்த மனக்குழப்பத்தால் மிகவும் வருத்ததோடே காணப்படுவீர்கள்.
எதிரிகள் அதிகரிக்கும் காலம் என்பதால், யாரிடம் பேசுவதாக இருந்தாலும் 3க்கு 4தடவை யோசித்து வார்த்தையை கவனமாக பேச வேண்டும். விளையாட்டாக பேசுவது கூடு பெரிய வினையாக மாறிவிரும். நீங்க அமைதியாக இருந்தாலும் உங்களை தேடி வந்து வம்புக்கு இழுப்பார்கள். எனவே, நீங்க உண்டு உங்க வேலையுண்டுனு இருப்பது சிறப்பு. அடுத்தவர் பிரச்சனையில் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும். பெரிய பிரச்சனையில் சிக்காமல் இருக்க வேண்டுமென்றால், அனைவரையும் அரவணைத்து நடந்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தாரிடம் அனுசரித்து நடந்துக்கொண்டால் தேவையில்லாத பின்விளைவுகளை தவிர்க்கலாம். தொழில் பெரிய முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். குரு பகவான் அமரும் இடம்தான் சிறப்பில்லாமல் இருக்கிறது, ஆனால் பார்வையிடும் இடம் அற்புதமாக இருக்கிறது.
அதாவது குரு பகவான் 5வது பார்வையாக 10வது வீடான தொழில் ஸ்தானத்தை பார்வையிடுவதால், புதிய தொழில் தொடங்குவது சம்பந்தமான எண்ணங்கள் தோன்றும். 6ல் குரு இருப்பதால் புதிய தொழில் தொடங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எதற்கும் ஆசைபட கூடாது. கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஆடம்பர செலவுகளை தள்ளி வைக்க வேண்டும். பணத்தை சேமிக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். திருமணம் சார்ந்த பிரச்சனையால் கவலையில் இருப்பீர்கள், அவை அனைத்தும் ஆரம்பத்தில் பயத்தை ஏற்படுத்தினாலும் இறுதியில் உங்களுக்கு சாதகமாகவே அமையும்.
வாழ்க்கை துணைக்கு இருந்துவந்த உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். வேலைபறிப்போகும் வாய்ப்புள்ளதால் பணியிடத்தில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு முயற்சி அதிகமாக இருந்தால் நிச்சயம் கிடைக்கும். குடும்பத்தில் வரவும் செலவும் சரியாக இருக்கும். பெரிய அளவிலான கஷ்டங்கள் இருக்காது. அடுத்தது, குரு பகவான் தனது 7வது பார்வையாக உங்க ராசிக்கு 12வது வீடான சுபவிரைய ஸ்தானத்தை பார்வையிடுவதால், தண்டச் செலவுகள் குறையும். வண்டி, வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டு. குடும்பத்தினரின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். திருமண முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.
அதேபோல், குரு பகவான் தனது 9வது பார்வையாக உங்க ராசிக்கு 2வது விடான தன ஸ்தானம், குடும்ப ஸ்தானம், வாக்கு ஸ்தானத்தை பார்வையிடுவதால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வார்த்தையில் தெளிவு பிறக்கும். வழக்கறிஞர்களுக்கு அற்புதமான காலக்கட்டம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இருப்பினும், தாயாரிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். ஆக மொத்தம் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்குமென்றால் கவனமிருந்தால் கவலை இல்லை.
பிரதோஷ நாட்களில் சிவபெருமானுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வருவதன் மூலமாக இன்னல் குறையும். அதேசமயம், வீட்டிற்கு அருகில் இருக்கும் மாரியம்மன் கோவியிலில் உள்ள வேப்ப மரம் மற்றும் அரச மரம் இரண்டு மரங்களையும் தினமும் காலை 7.45 மணிக்கு முன்பாக 12 முறை பிரதட்சணம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆரோக்கியப் பிரச்சனை அனைத்து பறந்தோடும். [இதை ஜூன் மாதம் 20 முதல் நவம்பர் 21 ஆம் தேதி வரை கண்டிப்பாக செய்ய வேண்டும்.]
இதையும் படிங்க:
◆ மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்
◆ சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்
◆ விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்
பிரதோஷ நாட்களில் சிவபெருமானுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வருவதன் மூலமாக இன்னல் குறையும். அதேசமயம், வீட்டிற்கு அருகில் இருக்கும் மாரியம்மன் கோவியிலில் உள்ள வேப்ப மரம் மற்றும் அரச மரம் இரண்டு மரங்களையும் தினமும் காலை 7.45 மணிக்கு முன்பாக 12 முறை பிரதட்சணம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆரோக்கியப் பிரச்சனை அனைத்து பறந்தோடும். [இதை ஜூன் மாதம் 20 முதல் நவம்பர் 21 ஆம் தேதி வரை கண்டிப்பாக செய்ய வேண்டும்.]
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…