முகப்பொலிவுக்கும், அழகுக்கும் கிரீம் உள்ளிட்ட பல்வேறு வேதிப்பொருள்கள் கலந்தவற்றை முகத்திற்குத் தடவி வருகிறோம். ஆனால், தற்போதைய அழகிற்கு நாம் பயன்படுத்தி வரும் இந்த கிரீம் காரணமாக, குறைவான வயதிலேயே, நம்முடைய முகத்தில் சுருக்கம் ஏற்படுவதைக் காணலாம். இது நமக்கு பல்வேறு அபாயங்களை அளிக்கும் விதமாக அமைகிறது. எனவே, முகப்பொலிவிற்கு நாம் இது போல வேதிப்பொருள்கள் கலந்த கிரீம்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கையான வகையில் முகப்பொலிவை உண்டாக்கலாம்.
இயற்கையான முகப்பொலிவிற்கு
நாம் இயற்கையாக எடுத்துக் கொள்ளும் சில உணவுப் பொருள்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம், முகம் மட்டுமல்லாமல், உடல் முழுவதும் சருமத்தைப் பராமரிக்க முடியும். அந்த வகையில் ஆப்பிள், மாதுளை, வெண்பூசணி போன்ற பழங்கள் உண்ணுதல் மற்றும் யோகா, உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் பொலிவைக் கொண்டு வர முடியும்.
முகப்பொலிவிற்கான யோகா
இந்தப் பதிவில், ஐந்து உடற்பயிற்சி முறைகளின் மூலம், முகப்பொலிவை எவ்வாறு உண்டாக்கலாம் என்பதைப் பற்றிக் காணலாம்.
முகப்பொலிவிற்காக நாம் செய்யும் எந்தவொரு யோகா அல்லது உடற்பயிற்சிக்கு முன்னதாக, ஒரு நல்ல தரமான சீரமை நம் முகத்தில் அப்ளை செய்து கொள்வது நல்லது.
இது நம் முகத்தை உடற்பயிற்சிக்கு எளிதாக ஒத்துழைக்க உதவுகிறது.
இவ்வாறு அப்ளை செய்த பின், முகம் முழுவதும் ஆங்காங்கே கை விரல்களால் மெதுவாக தட்டிக் கொண்டு வர வேண்டும். இது முகத்தின் ஆங்காங்கே உள்ள இரத்த ஓட்டத்தை திறம்படச் செய்ய வைக்கிறது.
அதன் பிறகு, கீழே கொடுக்கப்பட்ட ஃபேஷியல் யோகாவைத் தொடங்கலாம்.
முதலில் இரண்டு கைகளின் பெருவிரல்களையும், அதன் உள்ளங்கையில் மடித்து வைத்து பிறகு கையை முழுமையாக மூடி, இரு கன்னங்கள் இருக்கும் பகுதியில் வைத்து நன்றாக இழுத்தவாறு வெளிப்பகுதியை நோக்கி தேய்க்க வேண்டும்.
பின் நெற்றியில் அதே போல, மெதுவாக நெற்றியில் இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் மற்றும் வலது பக்கத்திலிருந்து இடது பக்கத்திற்கு பிரப் செய்ய வேண்டும்.
மூன்றாவதாக, வாயை பெரிய ஓ வடிவில் வைத்துக் கொள்ள வேண்டும். பின், உதடுகளை வாய்க்குள் செலுத்தியவாறு வைத்து, மூக்கின் இரண்டு பக்கங்களிலும், ஆள்காட்டி விரல்களை வைத்து மேல்நோக்கியவாறு பிரப் செய்ய வேண்டும்.
அடுத்து, நான்காவதாக முகத்தின் தாடை பகுதியில் இருந்து வலது மற்றும் இடது புறக் காது வரை, ஆள்காட்டி விரலை மடக்கி மெதுவாக மேல் நோக்கியவாறு ஸ்ட்ரெட்ச் செய்ய வேண்டும்.
ஐந்தாவதாக, கண்களுக்கான யோகாவைப் பார்க்கலாம். இதில், மோதிர விரல்களைப் பயன்படுத்தி கண்களைச் சுற்றிலும் மசாஜ் செய்ய வேண்டும். பொதுவாக, இந்த ஐ-மசாஜிற்கு மோதிர விரல் தான் சிறப்பாகும். ஏனெனில் இது தான், நமது கண்களுக்குத் தேவையான ப்ரெஸரைக் கொடுக்கக்கூடியதாக அமைகிறது.
இந்த ஐந்து படிகளையும் தினந்தோறும் செய்து வருவதன் மூலம், முகம் பொலிவடைவதை உங்களால் உணர முடியும். இவ்வாறு செய்வதன் மூலம், நமது முகத்தில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதுடன், தேவையில்லாததை வெளியே அனுப்புவதை (Outward Motion) குறிப்பதாக அமைகிறது. இது போல, எளிமையான இயற்கை முறைகள் மூலம் முகத்தை பொலிவடையச் செய்யலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…