இந்த காலத்தில் பலரது முகத்தில் முகப்பருக்கள் மற்றும் கருமை நிறமாக மாறுவது போன்ற பல பிரச்சனைகள் உள்ளது. இது போன்ற முகத்தில் ஏற்படும் பருக்களைச் சரிசெய்வதற்கு பியூட்டி பார்லர் சென்றால் அதிகமாகச் செலவாகும் எனப் பலர் நினைப்பார்கள்.
முகத்தில் ஏற்படும் முகப்பருக்களை வீட்டிலேயே இயற்கையான முறையில் சரிசெய்வது எப்படி எனப் பலரும் யோசிப்பார்கள். இந்த பதிவில் வீட்டிலேயே முகத்தில் ஏற்படும் பருக்கள்,கொப்புளங்கள் மற்றும் கருமை என அனைத்தையும் சரிசெய்வது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
✤ இந்த பதிவில் கடைகளில் விற்கும் எந்த பொருளையும் வாங்காமல் வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி முகத்திற்கு க்ரீம் தயார் செய்து அதைப் பயன்படுத்துவது பற்றிப் பார்க்கலாம். இதைப் பயன்படுத்தி முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கொப்புளங்கள் மற்றும் கருமை நிறத்தை போக்குவது எப்படி எனப் பார்க்கலாம்.
✤ தயிர் – 2 ஸ்பூன்
✤ மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
✤ காப்பி கொட்டை – 3 ஸ்பூன் (காப்பி கொட்டை அல்லது காப்பி தூள்)
✤ முதலில் ஒரு பாத்திரத்தில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் இரண்டு டிஸ்பூன் அளவிற்கு தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
✤ காப்பி கொட்டையாக இருந்தால் அதை முதலில் வெயிலில் காய வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். காப்பி பொடியாக இருந்தால் மூன்று டிஸ்பூன் அளவிற்கு எடுத்து அந்த கலவையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
✤ இதை மூன்றையும் சேர்த்து நன்றாகக் கலக்கினால் முகத்திற்கான பேஸ்ட் தயார். முகத்தை முதலில் நன்றாகக் கழுவ வேண்டும். காட்டன் துணியில் முகத்தைத் துடைக்க வேண்டும். அதற்குப் பின், தயார் செய்த பேஸ்டை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
✤ அதை முகம் மற்றும் கழுத்து பகுதிகளிலும் அப்ளை செய்யலாம். அப்ளை செய்த பிறகு, நன்றாக மாசாஜ் செய்ய வேண்டும். அதை 10 முதல் 20 நிமிடங்களுக்குப் பின்னர் அதை நன்றாகக் கழுவ வேண்டும்.
✤ இதை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் நீங்கி முகம் அழகாகவும் மற்றும் பளபளப்பாகவும் இருக்கும்.
மஞ்சள்
✤ மஞ்சள் ஒரு இயற்கையான நோய் எதிர்ப்புத் தன்மை அதிகமாக இருக்கும். இந்த கலவையில் மஞ்சள் தூள் பயன்படுத்தினால் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் பருக்கள் உள்ள அழுக்குகள், கிருமிகள் என இருந்தால் இது அவை அனைத்தையும் நீக்கி சரிசெய்யும்.
✤ தயிர் என்பது இயற்கையாகவே முகத்தை அழகாகவும் மற்றும் மென்மையாகவும் வைப்பதற்கு உதவும். இந்த கலவையில் தயிரைப் பயன்படுத்துவதால் சருமத்தை மிகவும் அழகாக வைக்கும். தயிரை மட்டும் கூட முகத்தில் பயன்படுத்தலாம்.
✤ காப்பி தூள் அல்லது கொட்டை என்பது இயற்கையாகவே முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும் பண்புகளைக் கொண்ட து. இந்த கலவையில் காப்பி தூள் அல்லது காப்பி கொட்டை பயன்படுத்துவதால் அது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி மிகவும் அழகாக வைக்க உதவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…