முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை எவ்வளவு முறைகளைச் செய்து நீக்கினாலும் ஒரு மாதம் அல்லது இரண்டாவது மாதத்தில் வளர ஆரம்பிக்கும். இதை எப்படி நிரந்தரமாக போக்குவது எனப் பலரும் யோசிப்பார்கள். முகம் மற்றும் கைகள், கால் எனத் தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீக்க வேண்டும் எனப் பலர் நினைப்பார்கள். பியூட்டி பார்லர் சென்றாலும் அதுவும் சில நாட்கள் மட்டும் தான். நிரந்தரமாக நீக்க வேண்டும் என நினைத்தால் இந்த பதிவு உங்களுக்குத் தான். இந்த பதிவில் சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நிரந்தரமாக நீக்குவதற்கான ஒரு ஐந்து டிப்ஸ் எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
✤ இந்த பதிவில் முகம் மற்றும் சருமத்தில் கைகள் மற்றும் கால்களில் உள்ள முடிகளை முழுவதுமாக நீக்குவது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இதில் ஐந்து முறை மூலம் முகத்தில் உள்ள முடிகளை நிரந்தரமாக நீக்குவது எப்படி என பார்க்கலாம்.
✤ இந்த முறையில் கொண்டைக்கடலை வைத்து எப்படி முடிகளை நிரந்தரமாக நீக்குவது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
✤ கொண்டைக்கடலை பொடி – 2ஸ்பூன்
✤ மஞ்சள் தூள்- 2 ஸ்பூன்
✤ பால் – தேவையான அளவு
✤ ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் அளவிற்குக் கொண்டைக்கடலை பொடி சேர்த்து, அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.
✤ அதில் பால் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலக்க வேண்டும். இதைச் சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளில் கீழ் இருந்து மேல் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
✤ அதை அப்படியே 15 முதல் 20 நிமிடங்கள் உலரவிடவேண்டும். அதன் பின், முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். இந்த முறை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தினால் முகத்தில் உள்ள அனைத்து முடிகளும் நீக்கும். நல்ல பலன் தரும்.
✤ இந்த முறையில் கடலை மாவை வைத்து எப்படி முடிகளை நிரந்தரமாக நீக்குவது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
✤ கடலை மாவு – 3 ஸ்பூன்
✤ ரோஸ் வாட்டர்- 1
✤ எலுமிச்சை சாறு – 1/2ஸ்பூன்
✤ முதலில் ஒரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் அளவிற்கு கடலை மாவு சேர்த்து அத்துடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.
✤ அத்துடன் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.
✤ அந்த பேஸ்ட் சருமத்தில் முடி அதிகமாக உள்ள இடத்தில் அப்ளை செய்ய வேண்டும். அதை 20 முதல் 30 நிமிடங்கள் உலர விட வேண்டும்.
✤ அதை அப்ளை செய்யும் போது முடி உள்ள இடத்திலிருந்து கீழ் இருந்து மேல் என அப்ளை செய்ய வேண்டும்.
✤ இப்படி வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்தால் விரைவில் தேவையற்ற முடிகள் முழுவதுமாக நீங்கும்.
✤ இந்த முறையில் அரிசி மாவு பயன்படுத்தி முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
✤ அரிசி மாவு – 3ஸ்பூன்
✤ பால் – 2 ஸ்பூன்
✤ மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
✤ முதலில் ஒரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு மற்றும் இரண்டு ஸ்பூன் அளவிற்குப் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
✤ அந்த கலவையில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.
✤ இந்த பேஸ்ட் முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். அதை 10 முதல் 20 நிமிடங்கள் உலர விட வேண்டும்.
✤ அதற்குப் பின், முகத்தைக் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு மூன்று முறை செய்யதால் நல்ல பலன் தரும்.
இந்த முறையில் சோள மாவு வைத்து முகத்தில் உள்ள முடிகளை சரிசெய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
✤ சர்க்கரை – 2 ஸ்பூன்
✤ சோள மாவு – 1 ஸ்பூன்
✤ முட்டை – 1
✤ முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதை நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.
✤ அத்துடன் ஒரு ஸ்பூன் சோளமாவு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.
✤ அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்குச் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.
✤ இந்த பேஸ்டை முகத்தில் தேவையற்ற முடிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
✤ அதை 10 முதல் 20 நிமிடங்கள் காய விடவேண்டும். 20 நிமிடங்களுக்குப் பின், இதைத் தண்ணீர் பயன்படுத்திக் கழுவாமல் ஒரு காட்டன் துணி வைத்து நன்றாகத் துடைக்க வேண்டும்.
✤ இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை செய்தால் நல்ல பலன் தரும்.
✤ இந்த முறையில் பப்பாளிப் பழத்தை வைத்து முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
✤ பப்பாளி – 1/2பழம்
✤ மஞ்சள் தூள் – 1/2ஸ்பூன்
✤ கற்றாழை ஜெல் – 5 ஸ்பூன்
✤ முதலில் அரை பப்பாளிப் பழத்தில் உள்ள தோல் நீக்காமல் அதை அப்படியே மசித்துக் கொள்ள வேண்டும்.
✤ அதில் ஐந்து ஸ்பூன் அளவிற்குக் கற்றாழை ஜெல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
✤ அத்துடன் அரை ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.
✤ இதை பேஸ்ட் போல் சேர்த்துக் கலக்க வேண்டும். இதை முகத்தில் தேவையற்ற முடிகள் உள்ள இடத்தில் இந்த பேஸ்ட் அப்ளை செய்ய வேண்டும்.
✤ கீழ் இருந்து மேல் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். இதை வாரத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தினால் விரைவில் முகத்தில் உள்ள முடிகள் முழுவதுமாக நீங்கும்.
✤ இந்த ஐந்து முறை மூலம் முகத்தில் உள்ள முடிகள் எளிதில் நீக்கலாம். இது மீண்டும் வராமல் இருக்கும். இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் விரைவில் தேவையற்ற முடிகளை நீக்கி சருமம் பார்ப்பதற்கு அழகாகவும் மற்றும் பளபளப்பாகவும் இதைப் பயன்படுத்தினால் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் முகத்தில் வேறு பிரச்சனைகள் இருந்தாலும் இதைப் பயன்படுத்தினால் விரைவில் சரியாகும்.
✤ முகத்தில் அலர்ஜி மற்றும் அம்மை போன்ற பிரச்சனைகள் இருந்தால் பயன்படுத்த வேண்டாம். இதைப் பயன்படுத்தி அதில் பிரச்சனைகள் அதிகமாகும். அது போன்று பிரச்சனைகள் இல்லாமல் இருந்தால் மற்றும் அது போன்ற பிரச்சனைகள் சரிசெய்த பிறகு,இந்த முறையை பயன்படுத்தலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…