Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Kanavu Palangal in Tamil : கனவில் தாவரங்கள் வந்தால் என்ன நடக்கும்..?

Manoj Krishnamoorthi October 11, 2022 & 07:20 [IST]
Kanavu Palangal in Tamil : கனவில் தாவரங்கள் வந்தால் என்ன நடக்கும்..?Representative Image.

நம் கனவில் நாம் பல விஷயங்கள் காண்பது யதார்த்தம், அதன் அர்த்தங்கள் என்ன என்பது பல முறை நமக்கு புலப்படுவதில்லை. ஆனால் நம் கனவில் தென்படும் ஒவ்வொரு விசயத்திற்கும் தனித்தனி சிறப்பு உண்டு. அதில் நம் கனவில் தாவரங்கள் வந்தாலும் அதற்கு ஒருவித அர்த்தம் உண்டு, இவ்வாசகத்தில் நம் கனவில் பறவைகள் வருவதால் என்ன பலன் என்பதைக் காண்போம்.

கனவில் தாவரங்கள் வந்தால் (Kanavu Palangal in Tamil)

PART 1: நம்ம கனவில் மாடு, எருமை வந்தால் இது நடக்குமா….  

Kanavu Palangal in Tamil : கனவில் தாவரங்கள் வந்தால் என்ன நடக்கும்..?Representative Image

தோட்டம் (Thottam Kanavil Vanthal)

  • சிறப்பாக அமையும் என்பது அர்த்தமாகும். ஒருவேளை தோட்டத்தில் பூக்கள் மற்றும் பழங்கள் கொத்து கொத்தாக இருப்பது போல கனவு வந்தாலும் குடும்பம் விருத்தியாகும், சொத்து சேரும். 
  • பூச்செண்டு கனவில் வந்தால் நமக்கு பொருளாதாரம் தொய்வு ஏற்பட உள்ளது. 
  • தோட்டத்தில் நாம் பூ, இலை, காய், பழங்கள் பறிப்பது போல கனவு வந்தால் வியாதிகள் உருவாகும் என்பதே அர்த்தமாகும். 
  • நம் கனவில் வாடி வதங்கிய மலர்கள் வந்தால் வியாதிகள் உண்டாகும். 
  • நாம் தோட்டத்தில் நடந்து செல்வது போல கனவு வந்தால் மனதில் மகிழ்ச்சி ஏற்படும் என்பது அர்த்தம் ஆகும்.
Kanavu Palangal in Tamil : கனவில் தாவரங்கள் வந்தால் என்ன நடக்கும்..?Representative Image

செடிகள் (Sedi Kanavil Vanthal)

  • நாம் செடி அல்லது மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது போல கனவு வந்தால் நமக்கு நன்மைகள் நடக்க போகிறது என்பது அர்த்தமாகும். 
  • பூக்கள் நிறைந்த செடி அல்லது மரம் நம் கனவில் வந்தால் நம் இல்லத்தில் சோக நிகழ்ச்சி நடக்கும் என்பதே பொருளாகும். 
  • மரம் அல்லது செடி பச்சை பசேல் என இருப்பதுபோல கனவு வந்தால் நம் வீட்டில் சுப நிகழ்ச்சி நிகழ உள்ளது என்பது அர்த்தமாகும்.  
  • முள் செடியில் துணி மாட்டி கொண்டால் பழைய பிரச்சனையில் இருந்து விடுதலை என்பதே பொருளாகும். 
Kanavu Palangal in Tamil : கனவில் தாவரங்கள் வந்தால் என்ன நடக்கும்..?Representative Image

துளசி செடி (Thulasi Sedi Kanavil Vanthal)

துளசி செடி நம் கனவில் வந்தால் இறைவனின் ஆசீர்வாதம் நமக்கு முழுமையாக கிடைக்க போகிறது என்பது அர்த்தமாகும். 

Part 2: கனவில் தானியங்களை பார்த்தால் இதுவா நடக்கும்..?

Kanavu Palangal in Tamil : கனவில் தாவரங்கள் வந்தால் என்ன நடக்கும்..?Representative Image

மருதாணி செடி (Maruthani Sedi Kanavil Vanthal)

மருதாணி செடியை கனவில் கண்டால் பல நாட்களாக துன்புறுத்திய நொய் நொடிகள் அகலும் என்பதே பலன் ஆகும். 

Part 3 : கோவில் சார்ந்த கனவு கண்டால் இத்தனை விசயங்கள் நடக்குமா...! 

Kanavu Palangal in Tamil : கனவில் தாவரங்கள் வந்தால் என்ன நடக்கும்..?Representative Image

சப்பாத்திக்கள்ளி செடி (Chapati Kalli Kanavil Vanthal)

சப்பாத்திக்கள்ளி செடி கனவில் வந்தால் எதிரிகளால் நமக்கு ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும் என்பது பொருளாகும்.

Part 4: கனவில் பறவைகள் வந்தால் என்ன நடக்கும்..?

Kanavu Palangal in Tamil : கனவில் தாவரங்கள் வந்தால் என்ன நடக்கும்..?Representative Image

மரம் (Tree Kanavil Vanthal)

  • நாம் அடர்ந்த காட்டில் தனியாக நடப்பது அல்லது இருப்பது போல கனவு வந்தால் மிக பெரிய நல்ல விஷயம் நடக்க போகிறது என்பதே பலன் ஆகும். 
  • நாம் மரத்தில் ஏறுவது போல கனவு வந்தால் நமக்கு ஓர் பொன்னான வாய்ப்பு கிடைக்க உள்ளது என்பது அர்த்தமாகும். 
  • ஆலமரம் கனவில் வந்தால் செய்கின்ற தொழில் முன்னேற்றம் என்று அர்த்தம் அகும், நல்ல பண வரவு ஏற்படும்.
  • சந்தன மரத்தை நம் கனவில் பார்த்தால் வாழ்வில் பல  எதிர்பாராத திருப்பங்கள் நடக்கும். மேலும் உறவினர் மூலம் பொருளுதவி கிடைக்கும் என்பது பொருளாகும். 
  • கொய்யா மரத்தைக் கனவில் பார்த்தால் நோய்கள் நீங்கும் என்பது பலன் ஆகும். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்