நவகிரகங்களுடனும், வைணவ சேத்திரங்களுடனும் தொடர்புடையவையே நவ திருப்பதிகள் என அழைக்கப்படுகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் வீற்றிருக்கும் பெருமாளையே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நவ திருப்பதிகளில் ஆறாவது திருப்பதியாகப் போற்றப்படும் சுக்ர பகவான் ஆன மகரநெடுங் குழைக்காதரைப் பற்றி காண்போம்.
நவதிருப்பதிகளில் ஆறாவது திருப்பதியாக விளங்குபவர் அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் சுவாமி ஆகும். நவகிரகத் தலங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தளம் சுக்ர பகவானுக்குரிய சிறப்பு வாய்ந்த தளமாகும். இத்திருத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த திருத்தலத்தில் வீற்றிருக்கும் மகரநெடுங்க் குழைக்காதரைப் புகழ்ந்து மங்களாசாசனத்தில் நம்மாழ்வார் அவர்கள் புகழ்ந்து பாடியுள்ளார். இந்த திருத்தலம், வைகுண்ட ஏகாதசி அன்று திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு, இந்த நவதிருப்பதி பெருமாளை வணங்கினால், எல்லா வினைகளும் தீரும் என்பது ஐதீகம்.
இந்த திருத்தலம் மிகப் பெரியதாகக் காணப்படும் ஆலயம் ஆகும். துர்வாசர், பூதேவியிடம் அஷ்டாஷர மந்திரத்தை உபதேசித்தார். இதனை ஜபித்து தவம் செய்து, தாமிரபரணியில் மூழ்கி எழும் போது, இரண்டு பெரிய குண்டலங்களைப் பூதேவி பெற்ராள். பின், ஸ்ரீ பேரை என்ற திருநாமத்தைப் பெற்றாள். பங்குனி மாதம் பௌர்ணமியில், தாமிரபரணியில் பெற்ற மீன் வடிவத்தைக் கொண்ட இரண்டு குண்டலங்களை பெருமாளுக்கு சமர்ப்பித்த பிறகு, பகவான் மகரநெடுங்குழைக்காதன் என்ற நாமத்தைப் பெற்றார்.
பூமிதேவியும், ஸ்ரீ பேரை என்ற நாமம் பெற்றதால், இந்த திருத்தலத்திற்கு திருப்பேரை என்ற பெயர் வந்தது. வருண பகவான், குருவை நிந்தை செய்து பாவம் விலகுவதற்கு பங்குனி பௌர்ணமியில் பகவானுக்கு திருமஞ்சனம் செய்து பாவம் விலகி நன்மை அடைந்ததாக கூறப்படுகிறது. பின், வருணன் பகவானை பூஜித்து, அந்த பாவம் விலகிய பிறகு அது நீங்கி மழை பெய்ததாக இந்த தலத்தின் வரலாறு கூறுகிறது.
இத்தலம், பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 88 ஆவது திவ்ய தேசமாக உள்ளது. மேலும், நவ திருப்பதிகளில் ஆறாவது திருப்பதியாக நவகிரகங்களில் சுக்ரன் தலமாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தென் திருப்பேரை பகுதியில் உள்ள இந்த திருத்தலம் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் கோவில்,
தென்திருப்பேரை,
தூத்துக்குடி,
தமிழ்நாடு - 628 621
தொடர்பு கொள்ள வேண்டிய எண்: +91 4630 256 476
புதன் தலமான இத்தலத்தில் உள்ள பெருமாளை வழிபடுவதன் மூலம், கிரக தோஷங்கள் நீங்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுவர்.
நவதிருப்பதி கோவில்கள் விவரங்கள்:
நவதிருப்பதி கோவில் 1: ஸ்ரீ வைகுண்டநாதர் கோவில்
நவதிருப்பதி கோவில் 2: நத்தம் விஜயாஸனர் திருக்கோவில்
நவதிருப்பதி கோவில் 3: திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்
நவதிருப்பதி கோவில் 4: திருப்புளியங்குடி பூமிபாலகர் திருக்கோவில்
நவதிருப்பதி கோவில் 5: ஆழ்வார் திருநகரி ஆதிநாதன்
நவதிருப்பதி கோவில் 6: மகரநெடுங் குழைக்காதர் திருக்கோவில்
நவதிருப்பதி கோவில் 7: வேங்கட வாணன் திருக்கோவில்
நவதிருப்பதி கோவில் 8: ஸ்ரீநிவாசன் திருக்கோவில்
நவதிருப்பதி கோவில் 9: அரவிந்தலோசனார் திருக்கோவில்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…