Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,896.13
-47.55sensex(-0.07%)
நிஃப்டி22,134.85
-13.05sensex(-0.06%)
USD
81.57
Exclusive

Nava Tirupathi: நவ திருப்பதி சக பகவானின் அருள்மிகு வேங்கட வாணன் கோவிலைப் பற்றி உங்களுக்குத் தெரியாத ஒன்று..?

Gowthami Subramani October 01, 2022 & 04:30 [IST]
Nava Tirupathi: நவ திருப்பதி சக பகவானின் அருள்மிகு வேங்கட வாணன் கோவிலைப் பற்றி உங்களுக்குத் தெரியாத ஒன்று..?Representative Image.

நவகிரகங்களுடனும், வைணவ சேத்திரங்களுடனும் தொடர்புடையவையே நவ திருப்பதிகள் என அழைக்கப்படுகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் வீற்றிருக்கும் பெருமாளையே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நவ திருப்பதிகளில் ஏழாவது திருப்பதியாகப் போற்றப்படும் சனி பகவானான வேங்கட வாணனான ஸ்ரீநிவாசன் தலத்தைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Nava Tirupathi: நவ திருப்பதி சக பகவானின் அருள்மிகு வேங்கட வாணன் கோவிலைப் பற்றி உங்களுக்குத் தெரியாத ஒன்று..?Representative Image

அருள்மிகு பூமிபாலர்

நவதிருப்பதிகளில் ஏழாவது திருப்பதியாக விளங்குபவர் அருள்மிகு வேங்கட வாணன், ஸ்ரீநிவாசன் ஆவார். நவகிரகத் தலங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தளம் சனி பகவானுக்குரிய சிறப்பு வாய்ந்த தளமாகும். இத்திருத்தலம் தூத்துக்குடியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த திருத்தலத்தில் அருள்பாலிக்கும் வேங்கட வாணன் பெருமாள், ஆனந்த நிலைய விமானத்தின் கீழ், கிழக்கே திருமுக மண்டல நின்ற திருக்கோலத்தில் காட்சி தருவார்.

Nava Tirupathi: நவ திருப்பதி சக பகவானின் அருள்மிகு வேங்கட வாணன் கோவிலைப் பற்றி உங்களுக்குத் தெரியாத ஒன்று..?Representative Image

தலத்தின் வரலாறு மற்றும் சிறப்பு

இந்த தலத்தில், அந்தணரான வேதாசரனுக்குப் பிறந்த கமலாவதி என்ற பெண், பகவானை வேண்டி தவம் செய்து, பின் பகவான் இந்த தலத்தில் காட்சி அளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த திருத்தலம் பாலிகை தவம் செய்த இடம் என்பதால், பாலிகை வனம் என அழைக்கப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், இந்த இடத்தில் அச்மசாரன் என்னும் அசுரன், பகவானுடன் யுத்தம் செய்தான். இதில், பகவான் அவனை வீழ்த்தி அவன்மேல் நாட்டியமாடி அழித்ததாகவும் கூறப்படுகிறது. தேவர்கள் பிரார்த்தனையின் படி, மாயக் கூத்தன் என்ற திருநாமத்தைப் பெற்றார். இந்த திருத்தலத்தில் கருட பகவான் பெருமாளுடன் உற்சவராகப் பக்கத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

இந்த திருத்தலம், பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 86 ஆவது திவ்ய தேசமாகும். மேலும், நவ திருப்பதிகளில் ஏழாவது திருப்பதியாக நவகிரகங்களில் சனி பகவானுக்குரிய தலமாக உள்ளது.

Nava Tirupathi: நவ திருப்பதி சக பகவானின் அருள்மிகு வேங்கட வாணன் கோவிலைப் பற்றி உங்களுக்குத் தெரியாத ஒன்று..?Representative Image

தலம் திறக்கப்படும் நேரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருங்குளம் பகுதியில் உள்ள இந்த திருத்தலம் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

Nava Tirupathi: நவ திருப்பதி சக பகவானின் அருள்மிகு வேங்கட வாணன் கோவிலைப் பற்றி உங்களுக்குத் தெரியாத ஒன்று..?Representative Image

வேங்கட வாணன் தலத்தின் முகவரி

அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோவில்,

பெருங்குளம்,

திருக்குளந்தை,

தூத்துக்குடி,

தமிழ்நாடு - 628 752

தொடர்பு கொள்ள வேண்டிய எண்: +91 4630 256 476

Nava Tirupathi: நவ திருப்பதி சக பகவானின் அருள்மிகு வேங்கட வாணன் கோவிலைப் பற்றி உங்களுக்குத் தெரியாத ஒன்று..?Representative Image

பிரார்த்தனை செய்தல்

இந்த திருத்தலத்தில் உள்ள பெருமாளை வணங்கி வழிபட்டால், அவரவர்களுக்கு இருக்கும் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகி விடும்.

 

 

நவதிருப்பதி கோவில்கள் விவரங்கள்:

நவதிருப்பதி கோவில் 1: ஸ்ரீ வைகுண்டநாதர் கோவில்

நவதிருப்பதி கோவில் 2: நத்தம் விஜயாஸனர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 3: திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 4: திருப்புளியங்குடி பூமிபாலகர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 5: ஆழ்வார் திருநகரி ஆதிநாதன்

நவதிருப்பதி கோவில் 6: மகரநெடுங் குழைக்காதர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 7: வேங்கட வாணன் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 8: ஸ்ரீநிவாசன் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 9: அரவிந்தலோசனார் திருக்கோவில்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்