நவகிரகங்களுடனும், வைணவ சேத்திரங்களுடனும் தொடர்புடையவையே நவ திருப்பதிகள் என அழைக்கப்படுகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் வீற்றிருக்கும் பெருமாளையே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நவ திருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாகப் போற்றப்படும் ராகு பகவான் ஸ்ரீநிவாசப் பெருமானைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
நவதிருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாக விளங்குபவர் இரட்டைத் திருப்பதி எனப் போற்றப்படும் ஸ்ரீநிவாசப் பெருமான் ஆவார். நவகிரகத் தலங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தளம் ராகு பகவானுக்குரிய சிறப்பு வாய்ந்த தளமாகும். இத்திருத்தலம் தூத்துக்குடியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த திருத்தலத்தில், ஸ்ரீநிவாசப் பெருமான், கிழக்கி நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். மேலும், இங்கு அம்மனாக அலமேலுமங்கை தாயார், பத்மாவதி தாயார் காட்சி தருகிறார்.
தென்திருப்பேரைக்கு அருகிலேயே இருக்கும் இந்த திருத்தலத்தில், இரண்டு கோயில்கள் உள்ளது. இவை இரண்டுமே இரட்டைத் திருப்பதி என போற்றப்படுகிறது. இது ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த கோவில் அடர்ந்த காட்டிற்குள் அமைந்ததால், இந்த கோவிலுக்கு அருகே வீடுகள் அதிகம் இல்லை. இது நவகிரகங்களில் ராகு கேது என இரு கிரகங்களுக்கும் உரிய தலமாக அமைகிறது.
அது மட்டுமல்லாமல், இந்த இடத்தில் அச்மசாரன் என்னும் அசுரன், பகவானுடன் யுத்தம் செய்தான். இதில், பகவான் அவனை வீழ்த்தி அவன்மேல் நாட்டியமாடி அழித்ததாகவும் கூறப்படுகிறது. தேவர்கள் பிரார்த்தனையின் படி, மாயக் கூத்தன் என்ற திருநாமத்தைப் பெற்றார். இந்த திருத்தலத்தில் கருட பகவான் பெருமாளுடன் உற்சவராகப் பக்கத்தில் எழுந்தருளியிருக்கிறார்.
இந்த திருத்தலம், பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 85 ஆவது திவ்ய தேசமாகும். மேலும், நவ திருப்பதிகளில் எட்டாவது திருப்பதியாகும். அதே போல, இரட்டைத் திருப்பதியில் முதல் திருப்பதி ஆகும். இது நவகிரகங்களில் ராகு பகவானுக்குரிய தலமாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொலைவிலிமங்கலம் பகுதியில் உள்ள இந்த திருத்தலம் காலை 8.00 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மதியம் 1 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும்.
அருள்மிகு ஸ்ரீநிவாசன் திருக்கோவில்,
நவதிருப்பதி (இரட்டைத் திருப்பதி)
திருத்தொலைவில்லி மங்கலம்,
தூத்துக்குடி,
தமிழ்நாடு - 628 752
தொடர்பு கொள்ள வேண்டிய எண்: +91 4639 273 607
இரட்டைத் திருப்பதிகளில் ராகு பகவானுக்குரிய இந்த திருத்தலத்தில் உள்ள பெருமாளை வணங்கினால், திருமணத் தடை நீங்கி, குழந்தை பாக்கியம் பெறவும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் வழிவகுக்கும் எனக் கூறுவர்.
நவதிருப்பதி கோவில்கள் விவரங்கள்:
நவதிருப்பதி கோவில் 1: ஸ்ரீ வைகுண்டநாதர் கோவில்
நவதிருப்பதி கோவில் 2: நத்தம் விஜயாஸனர் திருக்கோவில்
நவதிருப்பதி கோவில் 3: திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்
நவதிருப்பதி கோவில் 4: திருப்புளியங்குடி பூமிபாலகர் திருக்கோவில்
நவதிருப்பதி கோவில் 5: ஆழ்வார் திருநகரி ஆதிநாதன்
நவதிருப்பதி கோவில் 6: மகரநெடுங் குழைக்காதர் திருக்கோவில்
நவதிருப்பதி கோவில் 7: வேங்கட வாணன் திருக்கோவில்
நவதிருப்பதி கோவில் 8: ஸ்ரீநிவாசன் திருக்கோவில்
நவதிருப்பதி கோவில் 9: அரவிந்தலோசனார் திருக்கோவில்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…