சிக்கன் என்பது அனைவருக்கும் பிடிக்கும் ஆனால் அதில் எப்பொழுது குழம்பு மற்றும் சில்லி எனச் செய்து தான் சாப்பிடுவார்கள். அடுத்தாக சிக்கன் பொரியல் செய்து சாப்பிடுவார்கள் ஆனால் இந்த மாதிரி ஒரு புதுவிதமான ரெசிபி செய்து சாப்பிடலாம்.
✤ இது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பலரும் கடைகளில் வாங்கி சாப்பிடக் கூடிய ஒரு உணவு தான் இந்த சிக்கன் மஞ்சூரியன் ரெசிபி.
✤ இந்த பதிவில் சுவையான மற்றும் காரசாரமான சிக்கன் மஞ்சூரியன் ரெசிபி செய்வது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.
✤ எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ
✤ முட்டை – 1
✤ மிளகாய்த் தூள் – 1/2 டிஸ்பூன்
✤ உப்பு – சிறிதளவு
✤ மிளகு தூள் - சிறிதளவு
✤ எண்ணெய் – தேவையான அளவு
✤ மைதா மாவு – 3 டேபிள் ஸ்பூன்
✤ சோளா மாவு – 4 டேபிள் ஸ்பூன்
✤ இஞ்சி – 1
✤ பூண்டு – 10 பல்லு
✤ வெங்காயம் - 3
✤ குடைமிளகாய் – 2
✤ சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
✤ சில்லி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்
✤ தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்
✤ கொத்தமல்லி - சிறிதளவு
✤ முதலில் வெங்காயம் எடுத்து மேல் தோல் நீக்கி நன்றாகக் கழுவி பொடிப் பொடியாக நறுக்கவும்.
✤ குடைமிளகாய் எடுத்துக் கழுவிப் பொடியாக நறுக்கவும். இஞ்சி எடுத்து மேல் தோல் நீக்கி நன்றாகக் கழுவிப் பொடியாக நறுக்கவும்.
✤ பூண்டு தோல் நீக்கி கழுவிப் பொடியாக நறுக்கவும். அரை கிலோ அளவிற்கு எலும்பில்லாத சிக்கன் எடுத்து நன்றாகக் கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
✤ அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும். அதில் காரத்திற்காக அரை டிஸ்பூன் அளவிற்கு மிளகாய்த் தூள் மற்றும் ஒரு சிட்டிகை அளவிற்கு உப்பு எனச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
✤ அதில் மிளகு தூள் சிறிதளவு மற்றும் மூன்று டேபிள்ஸ்பூன் அளவிற்கு சோளா மாவு சேர்த்து நன்றாகப் பிசையவும்.
✤ அதில் மூன்று டேபிள்ஸ்பூன் அளவிற்கு மைதா மாவு சேர்த்து நன்றாகப் பிசையவும். இதில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாகக் கெட்டியான மாவு பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும்.
✤ அதை ஒரு 15 முதல் 20 நிமிடங்கள் ஊற விட வேண்டும். அதற்கு பின், மற்றொரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து நன்றாகச் சூடாக்க வேண்டும்.
✤ சூடான பின், அதில் பிசைந்த கலவையை சிறிது சிறிதாக சேர்த்துப் பொரித்துக் கொள்ளவும்.
✤ அந்த பொரித்த சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும். மற்றொரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
✤ சூடான பின், அதில் நறுக்கிய ஒரு வெங்காயம் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு இஞ்சி, ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்குப் பூண்டு, குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
✤ அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சோளா மாவு எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கரைத்து வதக்கிய கலவையில் சேர்க்கவும்.
✤ அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சோயா சாஸ் மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்குச் சில்லி சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.
✤ அதில் பொரித்து எடுத்து வைத்த சிக்கனை இதில் சேர்த்து நன்றாக வதக்கவும். அதை 5 முதல் 10 நிமிடங்கள் வதக்கவும்.
✤ அதற்குப் பிறகு அதில் சிறிதளவு மிளகு தூள் மற்றும் ஒரு சிட்டிகை அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அந்த சிக்கன் மசாலா தண்ணீர் கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.
✤ இறக்கிய சிக்கன் மஞ்சூரியனில் நறுக்கிய மீதமுள்ள வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தலை சேர்த்து நன்றாகக் கலக்கினால் சிக்கன் மஞ்சூரி தயார். சூடாக சாப்பிடலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…